states

img

அலிகார் பல்கலைக்கழக பேராசிரியர் சஸ்பெண்ட்!

அலிகார், ஏப்.7-  ‘புராணக் கதைகளில் பாலியல்  வல்லுறவு’ குறித்து, மாணவர்களுக்கு வகுப்பெடுத்த அலிகார் பல்க லைக்கழக பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்துக் கடவுள்களை அவதூறு செய்துவிட்டதாக எழுந்த புகார்களின் பேரில் இந்த நடவடிக்கையை எடுத் துள்ள அலிகார் பல்கலைக்கழக நிர்வாகம், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸூம் அனுப்பியுள்ளது. பாஜக ஆளும் உ.பி. மாநிலத்தில் அமைந்துள்ளது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம். இந்தியாவின் பழ மையான மத்திய பல்கலைக்கழ கமான இங்கு, மருத்துவத்துறை பேரா சிரியராக ஜிதேந்திர குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், மாணவர்களுக்கு “பாலி யல் வல்லுறவு பற்றிய புராணக் குறிப்பு” என்கிற தலைப்பில் வகுப்பெ டுத்துள்ளார். அப்போது அதுகுறித்த ஸ்லைடு ஷோவையும் அவர் காட்டி யிருக்கிறார்.  

அதில், பிரம்மா தனது மகளையே வல்லுறவுக்கு உள்ளாக்கியது, இந்தி ரன், கவுதம மகரிஷியை போல ஆள் மாறாட்டம் செய்து அவரது மனைவி யான துளசி விவாவை பாலியல் வல்லு றவு செய்தது, மன்னன் ஜலந்தரின் மனைவியை மகா விஷ்ணு பாலி யல் வல்லுறவு செய்தது போன்றவை  குறித்து பேசியுள்ளார். அத்துடன் நாட் டையே உலுக்கிய நிர்பயா பலாத் காரம், மதுரா பலாத்கார வழக்கு மற் றும் இந்து மரபுகளின்படி பல்வேறு வகையான திருமணங்கள் குறித்தும் அவர் பாடம் எடுத்திருக்கிறார். இதுதொடர்பாக, இந்துத்துவா ஆதரவு மாணவர்கள் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வழக்கம் போல சர்ச்சையைக் கிளப்பவே, அலி கர் முஸ்லிம் பல்கலைக்கழகம் தற்போது பேராசிரியர் ஜிதேந்திர குமாரின் செயலுக்கு கண்டனம் தெரி வித்து, அவரைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது. டாக்டர் ஜிதேந்திர குமார் மாண வர்கள் மற்றும் பேராசிரியர்களின் மத உணர்வை புண்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் 24 மணி நேரத்தில் பதி லளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ள பல்கலைக்கழக நிர்வா கம், இரண்டு பேர் கொண்ட விசா ரணைக் குழுவையும் அமைத்து ளளது.  புராணக் கதையைக் கூட மாண வர்களுக்கு சொல்ல முடியாத அள விற்கு, இந்த விவகாரம் பூதாகரம் ஆக்கப்பட்டதை அடுத்து பேராசி ரியர் டாக்டர் ஜிதேந்திர குமார் மன னிப்புக் கோரியுள்ளார்.