states

img

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

மாநிலங்களின் விருப்பப்படி நீட் தேர்வு ; பெண்களுக்கு ரூ.1 லட்சம் ; அக்னிபாதை ரத்து ; சாதிவாரி கணக்கெடுப்பு ;  தேர்தல் பத்திரம், பிஎம் கேர்ஸ், ரபேல், பணமதிப்பு நீக்கம் பற்றி விசாரணை

புதுதில்லி, ஏப். 5- “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 18-ஆவது மக்களவை தேர்தலுக் கான, தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம், பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் வெள்ளியன்று தில்லியில் வெளியிட்டனர்.

தேர்தல் அறிக்கையின் சுருக்கம் :

1. சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்.
2. நீட் (‎NEET), கியூட் (CUET) போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம்.
3. குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். இதே போல மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப் படும்.
4. தேசிய கல்விக் கொள்கை மாநில அரசுகளின்ஆலோசனைகளுக்கு பிறகே நடைமுறைப் படுத்தப்படும்.5. 2009இல் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ஆம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
6. 2025 முதல் ஒன்றிய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு
7. எஸ்சி., எஸ்டி., ஒபிசி பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். அதே போல எஸ்சி., எஸ்டி., ஒபிசி மாணவர் களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப் பாக்கப்படும்.
8.    ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது.
9. பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர திட்டம் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படும்.
10.பணியில் இருக்கும்போது தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ.30 லட்சம் வழங்கப்படும்.
11.  மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கான ஓய்வூதியம் ரூ.1000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல ரயில்களில் ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்க ளுக்கு கட்டண சலுகை மீண்டும் கொண்டு வரப்படும்.
12. குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரை அமல்படுத்தப்படும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பதற்காக நேரடி சந்தைகள் அமைக்கப்படும். 
13. மீனவர்களுக்கு டீசலுக்கான பழைய மானியம் தொடரும்.
14. புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும். அதே போல ஆந்திரமாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப் படும்.
15. ஊடக சுதந்திரத்தை காக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
16. கடந்த 10 ஆண்டுகளில் எவ்வித விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய சட்டங்களை ஆய்வு செய்து மாற்றங்கள் செய்யப்படும்.
17. பாஜகவில் சேர்ந்து குற்ற வழக்கில் இருந்துதப்பித்தவர்கள் மீண்டும் விசாரிக்கப்படு வார்கள்.
18. செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். 
19. கட்சி தாவினால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகள் தானாகவே பறிபோகும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும்.
20. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (EVM) செயல்திறன் மற்றும் வாக்குச்சீட்டின் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை இணைக்கும் வகையில் தேர்தல் சட்டங்கள் திருத்தம் செய்யப்படும். இவிஎம்மில் வாக்களித்ததை விவிபாட் இயந்திரத்தில் சரிபார்க்கும் முறை கொண்டுவரப்படும்.
21. மக்களின் உணவு, உடை, காதல் திருமணம் மற்றும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயணம் செய்து வசிப்பது போன்ற தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடமாட்டோம்.
22.அங்கன்வாடி பணியிடங்களை இரட்டிப் பாக்கி 14 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
23. ராணுவ சேர்க்கைக்கான அக்னிபாதை திட்டம் ரத்து செய்யப்படும்.
24. நூறுநாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ.400 ஆக அதிகரிக்கப்படும். அதே போல தேசிய அளவில் குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ.400 ஆக நிர்ணயிக்கப்படும்.
25. ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்படும்.
26. 21 வயதுக்கு கீழ் உள்ள திறமையுள்ள வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும்.
27. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்பேத்கர் நூலகங்கள் அமைக்கப்படும்.
28.வெறுப்பு பேச்சு, மதமோதல்கள், வெறுப்பு குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.