புதுதில்லி, ஏப். 23 - தனியார்மயமாக்கப்படவுள்ள பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கான ஏலத்தில், மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்க கூடாது என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் ‘முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மை வாரியம்’ (DIPAM) இதுதொடர்பாக வியாழ னன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப் பட்டிருப்பதாவது: ‘‘குறிப்பிட்ட பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார்மய மாக்கும் நடவடிக்கைக்கான ஏலத்தில், ஒன்றிய - மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் மற்ற பொதுத்துறை நிறு வனங்கள் பங்கேற்கக் கூடாது என்பதே பொதுவான கொள்கையாக உள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு அனுமதித்தால் மட்டுமே அவ்வாறான ஏலத்தில் மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்க முடியும். புதிய முதலீடுகள் கிடைக்காமை, புத்தாக்க நடவடிக்கைகள் இல்லாமை, நவீன தொழில்நுட்பம் கிடைக்காமை, உற்பத்தி மற்றும் சேவைகளைப் பன்முகப்படுத்த இயலாமை உள்ளிட்டவற்றால் பொதுத்துறை நிறுவனங்கள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.
வா்த்தகச் சூழல் தொடா்ந்து மாறி வரும் நிலையில், அத்தகைய பொதுத்துறை நிறுவனங்களால் தொழில் நடவ டிக்கைகளில் சிறப்பாக ஈடுபட முடிவதில்லை. அந்த நிறு வனங்களில் உள்ள சொத்துகள் முறையாகப் பயன் படுத்தப்படாமல் உள்ளன. தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கில், பல்வேறு துறைகள் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து விலகுவதற்கு ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இது தனியார் முதலீடுகளை ஈா்த்து, புத்தாக்க நட வடிக்கைகளை மேற்கொள்வதற்கு உதவும். இதற்கான கொள்கை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அணுசக்தி, விண்வெளி, பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் தொலைத்தொடா்பு, எரிசக்தி, பெட்ரோலியம், நிலக்கரி, கனிம வளங்கள், வங்கித்துறை, காப்பீடு உள்ளிட்ட துறைகளில் மட்டும் சில பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு தொடா்ந்து நிர்வகிக்கும். முக்கியத்துவம் அல்லாத துறைகளில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதற்கான வாய்ப்புகள் ஆராயப்படும். அவ்வாறு தனியார்மயமாக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களை மற்ற பொதுத்துறை நிறுவனங்களே வாங்குவது, ஒன்றிய அரசின் நோக்கத்தைத் தோல்விய டையச் செய்யும். எனவே, அவ்வாறான ஏலத்தில் பொ துத்துறை நிறுவனங்கள் பங்கேற்க வேண்டாம்.’’ இவ்வாறு ‘முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மை வாரியம்’ கூறியுள்ளது.