states

img

மோடி அரசு இன்று விற்கும் நாட்டின் சொத்துக்கள் காங்கிரசால் வந்தது!

கான்பூர், பிப்.17- நாட்டுக்காக சேவை செய்து, உயிரை யும் தியாகம் செய்த தனது குடும்பத்தி னரை பாஜக-வினர் தினமும் அவமரி யாதை செய்து வருவதாக பிரியங்கா காந்தி வேதனை தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கான்பூரில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங் கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது: “எனது குடும்பத்தினர் இந்த நாட் டுக்காக சேவையாற்றி உயிரை விட்டுள்ள னர். இதை நாங்கள் எப்போதும் தம்பட் டம் அடித்துக் கொண்டதில்லை. ஆனால் இன்று அதை சொல்ல வேண்டிய கட்டா யம் ஏற்பட்டுள்ளது. உயிர்த் தியாகம் செய்த எனது குடும்பத்தினரை பாஜக வினர் தினமும் கேலிசெய்து பேசுகின்ற னர். நாட்டுக்காக தியாகம் செய்வது என்றால் என்னவென்றே தெரியாத வர்கள் இவர்கள். நாட்டுக்காக உண்மை யாகத் துடிக்கும் இதயத்தின் உணர்வை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.  அவர்களைப் பொறுத்தவரை எல் லாமே தேர்தலுக்காக மட்டும்தான். தேர்த லில் ஆரம்பித்து தேர்தலோடு முடித்துக் கொள்வார்கள். உ.பி.க்கு வருவார்கள், பஞ்சாப்பிற்கு வருவார்கள், கோவா விற்கு வருவார்கள்.. தேர்தல் இல்லையா திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். அமெ ரிக்கா, கனடா என வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவார்கள். கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது? என்று கேட்கிறார்கள். இன்று அனைத்து பொதுத்துறை நிறு வனங்களையும் இவர்கள் தனியாருக்கு, தங்களது கார்ப்பரேட் நண்பர்களுக்காக விற்கிறார்கள். மிச்சமுள்ள பொதுத்துறை நிறுவனங்களையும் விற்க பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். துறைமுகங் கள், விமான நிலையங்கள், சாலைகள் என எதையும் விடவில்லை. எல்லா வற்றையும் விற்கிறார்கள். இப்படிப் பட்டவர்கள்தான் காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கிறார்கள். இவர்கள் எதையெல்லாம் விற்கிறார்களோ.. அவையெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் வந்தது என்பதை அவர்கள் மறந்து விட் டார்கள் இவ்வாறு பிரியங்கா காந்தி பேசி யுள்ளார்.