states

img

வங்கதேச விடுதலை மோடி சிறையில் இருந்ததாக எந்தப் பதிவும் இல்லை

புதுதில்லி, செப். 2- பிரதமர் நரேந்திர மோடி வங்காளதேச விடுதலை இயக்கத்தில் பங்கேற்றதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதற்கான பதிவுகள் கிடைக்கவில்லை என்று பிரதமரின் அலுவலகம் (பிஎம்ஓ) தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பதிலளித்துள்ளது. வங்கதேசத்தின் 50ஆவது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு டாக்காவுக்குச் சென்ற பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார். 20-22 வயதில், வங்கதேசத்தின் விடுதலைக்காக சத்தியாகிரகம் செய்ததாகக் கூறி, தன்னை கைது செய்து சிறையில் அடைத்ததாக மோடி கூறியிருந்தார். இந்தக் கூற்று பரவ லாக கேள்விக்குள்ளாக்கப்பட்டது. 1971 ஆகஸ்டில் தில்லியில் ஜனசங்கம் தர்ணா  நடத்தியது இந்திய-சோவியத் ஒப்பந்த த்தை எதிர்த்து என சுத்தபிரதா சென்குப்தா  சுட்டிக்காட்டினார். மோடி இந்த நிகழ்ச்சி யில் பங்கேற்றதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.  இதையடுத்து, 5 பிரச்சனை களை முன்வைத்து, பொதுநல ஊழியர் ஜெயேஷ் குர்னானி, கடந்த மார்ச் 27ஆம் தேதி, தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தை தாக்கல் செய்தார். எந்தப் பிரிவுகளின் கீழ் மோடி கைது செய்யப்பட்டார், எப்ஐஆர் நகல், சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப் பட்டதற்கான பதிவு போன்றவை கோரப் பட்டன. பிஎம்ஓ இணையதளத்தில் ‘பிரதம ரின் உரைகள்’ என்ற ஹைப்பர் லிங்கில் இந்த தகவல் உள்ளது என்று பதில் வந்தது. அதற்கு அவர் அளித்த பதிலில், 2014ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவி யேற்ற பிறகு, அதிகாரப்பூர்வ பதிவுகள் மட்டுமே வைக்கப்படுகின்றன. இதனால் அதிருப்தி அடைந்த குர்னானி, முதலாவது மேல்முறையீட்டு ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார், அது தொழில்நுட்ப காரணங்களால் தள்ளுபடி செய்யப்பட்டது.