states

img

பகத்சிங்கின் தியாகத்திற்குள் ஒளிந்து கொண்டு சாவர்க்கரை போராளியாக காட்ட முயலும் அமித்ஷா!

புதுதில்லி, ஜன. 12 - இந்திய விடுதலைப் போராட்டத் தில் பாஜக-வுக்கும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-க்கும் எந்தப் பங்கும் இல்லை. மாறாக, வி.டி. சாவர்க்கர் துவங்கி அடல் பிகாரி வாஜ்பாய் வரை, நாட்டின் விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த வரலாறுதான் அவர்களுக்கு இருக்கிறது. இதன் காரணமாக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் கொண்ட சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர் களைத் தங்களவர்கள் போல காட்டிக்கொள்ளும் சூதுவேலையை நீண்டகாலமாக செய்து வருகிறது. சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மாவீரன் பகத்சிங் போன்றவர்கள் வரலாற்றில் மறைக்கப்பட்டு விட்ட தாக, போலியாக கண்ணீர் சிந்து வதையும், தந்திரமாக இவர்களுடன் வி.டி. சாவர்க்கரையும் இணைத்து தியாகியாகக் காட்டவும் முயன்று வருகிறது.  இந்த முயற்சியை தில்லியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா  ஒன்றிலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்துள்ளார். பகத்சிங் கின் தியாக வெளிச்சத்தில் சாவர்க் கரையும் விடுதலைப் போராட்ட வீரராக காட்ட முயன்றுள்ளார்

“இந்தியாவில் ஆங்கிலேயர் களுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டமே அகிம்சை இயக்கத் தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது; ஆயுதப் போராட்டம் நடக்காமல் இருந்திருந்தால் சுதந்தி ரத்தை பெறுவதற்கு மேலும் சில பத்தாண்டுகள் ஆகியிருக்கும்” என்று அமித்ஷா பேசியுள்ளார். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் எழுதியுள்ள ‘Revo lutionaries - The Other Story of India Won Its Freedom’ என்ற நூல் வெளியீட்டு விழா தில்லியில் நடை பெற்ற நிலையில், அதில் நூலினை வெளியிட்டு அமித்ஷா மேலும் கூறியிருப்பதாவது: “ஆங்கிலேயர்களை இந்தியா வில் இருந்து வெளியேற்றுவதற்கு அகிம்சை போராட்டங்கள் பெரிய அளவு உதவி செய்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. ஆனால் அதற்காக ஆயுதம் ஏந்திய போராட்டம் முக்கியமற்றது என்ப தல்ல. இவ்வாறு ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் ஒழுங்கற்ற மற்றும்  தனிநபர் போராட்டமாக சித்தரிக்கப் பட்டுள்ளன. அகிம்சை போராட்டத் தை நியாயப்படுத்த ஆயுதமேந்திய போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவது சரியல்ல. 

இந்தியாவை பொறுத்த அளவில், ஆயுதப் போராட்டங்கள் நியாயமான முறையில் எழுதப்பட வில்லை. சுதந்திரப் போராட்டத்தின்  கதையை இந்திய கண்ணோட்ட த்தில் சொல்லும் பொறுப்பை கொண்டவர்கள் இந்த கடமையை சரியாக செய்யத் தவறிவிட்டார்கள். பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது லாகூர் தொடங்கி கன்னியாகுமரி வரை மக்கள் துக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். உணவு கூட உண்ண முடியாத அளவுக்கு சோகம் அவர்களை வாட்டி வதைத்தது. அவரின் உயிர்த் தியாகம் சுதந்திரப் போராட்டத்தை தீவிரப்படுத்தி யுள்ளது என்பதை யாராலும் மறுக்க  முடியாது. இந்த உயிர் தியாகம் உட னடியான தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்பதால் அவரது தியாகத்திற்கான போதிய மதிப்பு கொடுக்கப்படவில்லை. இது இவருக்கு மட்டுமல்ல இவரைப்போல உயிர் தியாகம் செய்த பல வீரர்களுக்கு கொடுக்கப் படவில்லை. நான் அரசியலில் இருப்பதால் இப்பிரச்சனை குறித்து மேலும் பேச விரும்ப வில்லை. அப்படி பேசினால் இது அரசியலாகிவிடும். எப்படி இருப்பி னும் இவர்களுக்கு போதுமான இடம் வழங்கப்படவில்லை என்பதே உண்மை.  இந்நிலையில் சன்யால் எழுதிய இந்த புத்தகம் சுதந்திர போராட்டத் தில் அதிகம் அறியப்படாதவர்களை பற்றியது. இவர்கள் குறித்து பொது  சமூகத்தில் நிலைத்துள்ள பிம்பத்தை  உடைப்பதே இப்புத்தகத்தின் நோக்க மாகும். தங்கள் பாரம்பரியத்தைப் பற்றி பெருமை கொள்ளாத குடிமக்கள் ஒரு பெரிய தேசத்தை உருவாக்க முடியாது. இவ்வாறு அமித்ஷா பேசியுள்ளார்.