சாண்டியாகோ, ஜன.16- தனது பதவிக்காலம் நிறைவு பெறுவதற்கு முன்பாக நாட்டின் வளங்களைத் தாரை வார்க்கும் பணியில் சிலியின் வலதுசாரி ஜனாதிபதி செபாஸ்டியன் பெனெரா ஈடுபட்டிருக்கிறார். சிலியின் புதிய ஜனாதிபதி யைத் தேர்வு செய்வதற்கான இரண்டாவது சுற்றுத் தேர்தல் டிசம்பர் 19, 2021 அன்று நடை பெற்றது. நவம்பர் 21 அன்று நடந்த முதல் சுற்றில் வலது சாரி வேட்பாளர் ஜோஸ் அன் டோனியோ கஸ்ட் முதலிடத்தில் இருந்தார். எந்த வேட்பாளரும் 50 விழுக்காடு வாக்குகளை முதல் சுற்றில் பெறாத நிலை யில், அந்த சுற்றில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற வேட்பா ளர்கள் இரண்டாவது சுற்றில் போட்டியிட்டனர். இதில் இடது சாரி வேட்பாளர் காப்ரியல் போரிக், வலதுசாரி அன்டோனியோ கஸ்ட்டைத் தோற்கடித்தார். மார்ச் 11, 2022 அன்று போரிக் பதவியேற்கவிருக்கிறார். இந்த நிலையில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் செபாஸ்டியன் பெனெரா தனது வலதுசாரிக் கொள்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்.
சிலி யில் அபரிமிதமாக இருக்கும் லித்தியத்தைத் தோண்டி எடுப்ப தற்கான இரண்டு ஒப்பந்தங் களை அவசர, அவசரமாக அவர் போட்டுள்ளார். 1 லட்சத்து 60 ஆயிரம் டன் லித்தியத்தை இந்த ஒப்பந்தங்கள் மூலம் நிறுவனங் கள் எடுக்கப் போகின்றன. ஏழாண்டுகள் லித்தியத்தை எடுத்துக் கொள்ள அனுமதி யளிக்கும் இந்த இரண்டு ஒப்பந் தங்களையும் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள போரிக் கடுமையான எதிர்த் துள்ளார். இந்த இரண்டு ஒப்பந் தங்களையும் எடுக்கும் போட்டி யில் சிலி நிறுவனங்களும் கலந்து கொண்டன. ஆனால் அந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட வில்லை. அதோடு, இந்த இயற்கை வளங்களை அரசே கையாள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. ஒப்பந்தங்களைத் தருவதில் செபாஸ்டியன் பெனெரா அரசு காட்டும் அவசரத்தை சுட்டிக் காட்டியுள்ள எதிர்க்கட்சிகள், தனியார் மயத்தைத் தீவிர படுத்தவே அவர் முயல்கிறார் என்று சுட்டிக்காட்டியுள்ளன.