states

img

பிரதமர் மோடி மலிவான நாடகம் ஆடுகிறார்!

முதல்வர் சரண்ஜித் சிங் குற்றச்சாட்டு சண்டிகர், ஜன.7- பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப்பய ணம் மேற்கொள்ள முடியாமல் திரும் பிய பிரதமர் நரேந்திர மோடி, ‘தன்னை உயிருடன் அனுப்பி வைத்த தற்கு பஞ்சாப் முதல்வருக்கு நன்றி’ தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். அத்துடன், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தும் அவர், நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கினார்.  பாஜகவினரும், இந்த சம்பவங்களை வைத்து, பஞ் சாப் மாநிலத்தில் நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்ற பிரச்சாரத்தை பூதாகரமாக்கி வருகின்றனர். இந்நிலையில், “பஞ்சாப் மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனநாயக ஆட்சியைக் கவிழ்க் கவே, பிரதமர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் என மலி வான நாடகம் ஆடுகிறார்” என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி சாடியுள்ளார்.

இதுதொடர்பாக மேலும் கூறியிருக்கும் அவர், “உண்மையில் பிரதமரின் உயிருக்கு எந்த அச்சுறுத்த லுமே இல்லை. அவர் தனது பயணத்தை ரத்து செய்யக் காரணம் பெரோஸ்பூர் பொதுக்கூட்டத்திற்குத் தேவை யான கூட்டம் கூடவில்லை என்பதே. மைதானத்தில் காலி நாற்காலிகள் இருப்பதாக வந்த தகவலால் அவர் திரும்பிச் சென்றார். போராட்டக்காரர்கள் ஒரு கிலோ மீட்டருக்கும் அப்பால் இருந்தபோது எப்படி உயிருக்கு அச்சுறுத்தல் என்று பிரதமர் கூற முடியும்? பஞ்சாப் மக்கள் தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறை யாண்மைக்காக உயிரை நீத்தவர்கள். அவர்கள் எப்படி இந்நாட்டு பிரதமரின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் அச்சு றுத்தலாக இருப்பார்கள்? நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சமூக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும் பஞ்சாப் மக்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். அவர்களை பிர தமர் அவமானப்படுத்த வேண்டாம். அரசியல் கார ணங்களுக்காக மாநிலத்தையே அவமதிக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.