உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை
புதுதில்லி, பிப்.12- சிஏஏ சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்களிடம், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட் டுள்ள நிலையில், இதுதொடர்பான நோட்டீஸ்களை அரசே தலையிட்டு திரும்பப் பெற வேண்டும்; இல்லா விட்டால். நாங்களே அதனை ரத்து செய்வோம் என்று உ.பி. பாஜக அர சுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. பிப்ரவரி 18 வரை தான் அவகாசம்; அதற்குள் நோட்டீஸ் களை திரும்பப் பெற்றாக வேண்டும்; இல்லாவிட்டால் கடும் விளைவு களைச் சந்திக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். ‘சிஏஏ’ எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை, கடந்த 2019-ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தது. முஸ்லிம்களை மட்டும் விலக்கிவைத்து, அவர்களை இரண் டாந்தர குடிமக்களாக்கும் வகையில் ‘சிஏஏ’ சட்டம் இருந்ததால், நாடுமுழு வதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதில், என்ஆர்சி சட்டம் இந்துக்கள் உள் ளிட்ட அனைத்து மதத்தினருக்குமே எதிரானது என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. நாடு முழுவதும் போராட் டங்கள் வெடித்தன. உத்தரப் பிர தேசத்திலும் பல்வேறு நகரங்களில் ஆவேசமிக்க போராட்டங்கள் நடை பெற்றன.
தில்லியில், ஆர்எஸ்எஸ் பரி வாரங்களை ஏவிவிட்டு, வன்முறை மூலம் இந்தப் போராட்டங்களை பாஜக அரசு ஒடுக்கியது. உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் பொய் வழக்குகளைப் போட்டு ஆயிரக்க ணக்கான இஸ்லாமியர்களை சிறை யில் அடைத்தது. உ.பி. முதல்வர் ஆதித்யநாத், ஒருபடி மேலே சென்று, போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்ட தாக கூறி, அதற்கான இழப்பீடு போராட்டக்காரர்களிடமே வசூ லிக்கப்படும் என்று அறிவித்தார். இதன்படி கோடிக்கணக்கான ரூபாய் களை, அப்பாவி பொதுமக்களுக்கு அபராதமாக விதித்தார். இதன்மூலம் ஏழை இஸ்லாமியர்களுக்கு மிகப் பெரிய நெருக்கடியைக் கொடுத்தார். இந்நிலையில்தான், ‘பர்வைஸ் ஆரிப் டிட்டு’ என்பவர் தொடர்ந்த வழக்கில், முறையான விசாரணை யின்றி, அனுப்பப்பட்ட அபராதம் தொடர்பான நோட்டீஸ்களை, பிப்ர வரி 18-க்குள் திரும்பப் பெற்றாக வேண்டும் என்று நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டிருப்ப தாவது:
நீதிமன்ற விதிமீறலில் ஈடு பட்டுள்ளது. சட்டத்தை மீறியுள்ளது. உ.பி. அரசே, புகார் தாரராகவும், வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும் மாறி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. உச்சநீதிமன்றம் கடந்த 2009 மற்றும் 2018 ஆண்டுகளில் இரண்டு முக்கிய தீர்ப்புகளை வழங்கியது. இதுபோன்ற சம்பவங்களில் உரிமை கோரல் தீர்ப்பாயங்களில் நீதித் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் எனத் தெளிவாகக் கூறப் பட்டுள்ளது. ஆனால், அதற்குப் பதி லாக உ.பி. அரசு கூடுதல் மாவட்ட நீதிபதிகளை நியமித்துள்ளது. நீதித்துறை அதிகாரியால் தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட்டுள்ள நிலை யில், இந்த நோட்டீஸூக்கான நட வடிக்கைகளை கூடுதல் மாவட்ட நீதி பதிகள் எவ்வாறு மேற்பார்வையிட்டனர் என்பதைக் கூற வேண்டும். சட்டத் திற்கு முன் வெளியிடப்பட்ட நோட் டீஸ்கள் உச்சநீதிமன்ற உத்தரவு களுக்கு முரணாக இல்லை என்பதை யும் உறுதிப்படுத்த வேண்டும் என்ற னர்.
2019 டிசம்பரில் அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு எதிராக மட்டுமே இந்த வழக்கு தொடப்பட்டுள்ளது. மொத்தம் 236 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக உ.பி. அரசு குறிப்பிட்டுள்ளது. உ.பி போன்ற பெரிய மாநிலத்தில் 236 நோட்டீஸ் களை வாபஸ் பெறுவது பெரிய விஷயம் இல்லை. ஒரு பேனாவால் அவற்றைத் திரும்பப் பெறலாம். எங்கள் பரிந்துரைகளைக் கேட்க முடியாது என்றால், பின்விளைவு களைச் சந்திக்க உ.பி. அரசு தயா ராக இருக்க வேண்டியதுதான்... உச்சநீதிமன்ற தீர்ப்புகளை எப்படிப் பின்பற்ற வேண்டும் என்பதை நாங் கள் உங்களுக்குக் காட்டுவோம். இந்த நோட்டீஸ்களை நாங்கள் ரத்து செய்வோம். உ.பி. அரசு என்ன செய்ய விரும்பு கிறது என்பதை அடுத்த வெள்ளிக் கிழமை எங்களிடம் கூற வேண்டும். அடுத்த விசாரணையில், இந்த விஷ யத்தை முடித்துவிடுவோம். இதை பரிசீலனை செய்திட பிப்ரவரி 18 வரை ஒரு அவகாசம் தருகிறோம். இவ்வாறு நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூர்ய காந்த் அமர்வு கூறி யுள்ளது.