states

img

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு துணை முதல்வர் பதவிக்கு பவன் கல்யாண் கட்சி குறி

மக்களவை தேர்தலோடு ஆந்திர மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலை யில், எண்ணிக்கை முடிவில் மொத்த முள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு  தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 தொகுதி களை (தெலுங்கு தேசம் - 135, ஜன சேனா - 21, பாஜக - 8) கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 தொகுதி களை மட்டுமே கைப்பற்றி எதிர்க்கட்சிக் கான அந்தஸ்தையும் இழந்தது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்திற் கான புதிய முதல்வரை தேர்வு செய் யும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி களின் கூட்டம் அமராவதியில் செவ் வாயன்று நடைபெற்றது. இந்த கூட் டத்தின் முடிவில் ஆந்திர மாநில முதல் வராக சந்திரபாபு நாயுடு தேர்வு செய் யப்பட்டார். தொடர்ந்து புதனன்று சந்திர பாபு நாயுடு முதல்வர் பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர், 5 அமைச்சர்கள் பதவி வேண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு முன்பு, அக்கூட்டணிக் குள் அங்கம் வகிக்கும் ஜனசேனா கட்சியின் கூட்டம் நடைபெற்றது. ஜன சேனா கட்சியின் தெனாலி எம்எல்ஏ என்.மனோகரின் முன்மொழிவோடு பவன் கல்யாண் அக்கட்சியின் சட்ட மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஆந்திர துணை முதல்வர் (பவன் கல்யாண்) பதவி மற்றும் 5 அமைச்சர்கள் பதவி கோரவும் ஜன சேனா கட்சியின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. அவ்வாறு பவன் கல்யா ணுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க வில்லை என்றால் எதிர்க்கட்சியாக செயல்படவும் முடிவு எடுக்கப்பட்டுள் ளதாக செய்திகள் வெளியாகி வரு கின்றன.