3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைத்தது நாடாளுமன்றம்
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் யாரும் இல் லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது ஒரு அறையில் பல மூட்டைகளில் கட்டுக் கட்டாக பணம் எரிந்து சாம்பலாகிக் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் தகவல் தெரி விக்கப்பட்டது. இதனிடையே யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர், தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நியமித்த குழு தீவிர விசா ரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித் தது. இதன் அடிப்படையில் பதவி விலகு மாறு நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். ஆனால் அவர் இதை ஏற்க மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய நடவ டிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவ ருக்கும், பிரதமருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடிதம் அனுப்பினார். இந்நிலையில், நீதிபதிகள் விசார ணைச் சட்டம் 1968இன் கீழ் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், மக்களவை சபாநாய கர் ஓம் பிர்லா செவ்வாய்க்கிழமை அன்று 3 பேர் கொண்ட குழு அமைத்து, அறி விப்பு வெளியிட்டுள்ளார். அதில், உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர்நீதிமன்ற மூத்த வழக்க றிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகியோர் விசா ரணை மேற்கொள்வார்கள் என தெரி வித்துள்ளார். இந்த விசாரணைக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்வரை மேல் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப் படுகிறது என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.