ஜெய்ப்பூர்,பிப்.20- சாதி ஆதிக்கச்சக்திகளின் அச்சுறுத்தலால் ராஜஸ்தானில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பட்டியலினத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி, குதிரையில் திருமண ஊர்வலம் சென்றார். பண்டி மாவட்டத்தில் திருமணத்தன்று பட்டியலினத்தவர்கள் குதிரை ஊர்வலம் செல்ல குறிப்பிட்ட சாதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பட்டியலின ஐ.பி.எஸ். அதிகாரி தன்வந்தா, திருமணத்தன்று குதிரையில் செல்ல பாதுகாப்பு கோரினார். ஐ.பி.எஸ். அதிகாரி என்றாலும், சொந்த கிராமத்தில் சாதி ரீதியான அச்சுறுத்தல் இருப்பதாக அவர் வேதனை யுடன் தெரிவித்தார். இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் முழு பாதுகாப்புடன் ஐ.பி.எஸ் அதிகாரியின் திருமண ஊர்வலம் நடைபெற்றது.