states

img

அடக்கு முறையை மீறுவோம் பாலஸ்தீனர்கள் உறுதி

மேற்குக்கரை, பிப்.5- இஸ்ரேலின் குடியேற்றக் கொள் கையைக் கண்டித்து பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து தங்கள் போரா ட்டத்தைத் தொடர்கிறார்கள். மேற்குக்கரையின் நேப்ளஸ் பகுதியில் பெய்டா நகரில் நூற்றுக் கணக்கான பாலஸ்தீன மக்கள் இஸ் ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிரான இந்தப் போராட்டத்தை நசுக்கப் பல் வேறு நடவடிக்கைகளை இஸ்ரேல் அரசு எடுத்து வருகிறது. இவர்களு க்கு எதிராக கண்ணீர்ப்புகைக் குண் டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை இஸ் ரேல் ராணுவமும், காவல்துறையும் பயன்படுத்தி வருகின்றன.  ரப்பர் குண்டுகளை மக்கள் மீது பயன்படுத்தியதில் 42 பேர் காயங்க ளுடன் மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டதால் 87 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மே 2021இல் இருந்து இந்தப் பகுதியில் மக்கள் போராடிக் கொண்டிருக்கி றார்கள். புதிய, புதிய ராணுவ முகாம் களை இஸ்ரேல் அமைத்து வரு கிறது. தங்களால் குடியேற்றம்  செய்யப்பட்டுள்ள இஸ்ரேலியர்க ளைப் பாதுகாக்கவே இந்த முகாம் கள் என்று ராணுவம் கூறுகிறது. பெய்டா நகரில் நடைபெற்று வரும் போராட்டத்தால் உத்வேகம் அடைந்துள்ள அருகாமையில் உள்ள பல நகரங்களிலும் போராட்டங்கள் துவங்கியுள்ளன. அங்கும் இஸ் ரேல் ராணுவம் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

அங்கும் கண்ணீர்ப் புகைக் குண்டு கள் மற்றும் ரப்பர் குண்டுகள் போராடி வரும் மக்கள் மீது பயன்படுத்தப் பட்டுள்ளன. இந்த அடக்குமுறை நட வடிக்கைகளை மீறி பெய்ட் டாஜன் உள்ளிட்ட இடங்களில் போராட்டங் கள் நடந்து வருகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கையில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதி களில் புதிதாக 1,500 புதிய குடியிரு ப்புகளை அமைக்க இஸ்ரேல் நிர்வாகம் ஒப்புதல் அளித்திருக்கி றது. 1967 ஆம் ஆண்டிலிருந்து இது போன்ற குடியிருப்புகளை இஸ் ரேல் அமைத்து வருகிறது. அப்போ திருந்து மேற்குக் கரைப்பகுதியில் 230 புதிய குடியிருப்புப் பகுதிகள் உருவாக்கப்பட்டு, அதில் சுமார்  6 லட்சம் இஸ்ரேல் மக்கள் குடிய மர்த்தப்பட்டுள்ளனர். சர்வதேசச் சட்டப்படி இந்த குடியிருப்புகள் அனைத்தும் சட்டவிரோதமாகும். பல்வேறு தீர்மானங்கள் மூலம் இந்த ஆக்கிரமிப்புகளை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கண்டித்துள்ளது.