states

img

சாதிப் பிரிவை ஏற்படுத்திவிட்டு ‘வசுதெய்வக் குடும்பம்’ என பேசலாமா? ஹிந்துஸ்தானில் மனிதர்களை மனிதர்களாக மதிக்கத் தயாரா?

புதுதில்லி, ஜன. 12 - முஸ்லிம்கள் மற்றும் கம்யூ னிஸ்டுகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியிருப்பதற்கு, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோர் கண்டனம் தெரி வித்துள்ளனர். தில்லியில் நடைபெற்ற ஆர்எஸ் எஸ் கூட்டத்தில் அதன் தலைவர் மோகன் பகவத் பேசியிருந்தார். அப்போது, ‘நாங்கள் உயர்ந்த இனம். ஒரு முறை இந்த மண்ணை ஆண்டோம், மீண்டும் ஆள்வோம்.  எங்களுடைய பாதை மட்டுமே சரி யானது. நாங்கள் வேறுபட்டவர்கள், ஒன்றாக வாழ முடியாது’ என்ற கதை களையும் முஸ்லிம்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இங்கு வாழும் அனைவருமே, அது இந்துவாக இருந்தாலும் சரி, கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும் சரி, இத்தகைய தர்க்கத்தைக் கைவிட வேண்டும்” என்று மிரட்டியிருந்தார். “எளிய உண்மை  இதுதான், ஹிந்துஸ்தான் ஹிந்துஸ்தானமாக இருக்க வேண்டும். இன்று பார தத்தில் வாழும்  முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும்  இல்லை. அவர்கள் பயப்பட ஒன்றுமில்லை. அதே நேரத்தில், முஸ்லிம்கள் தங்களை மேலாதிக்கம் (“supremacy”) கொண்டவர்களாக காட்டிக்கொள் ளும் ஆவேசப் பேச்சுக்களை கைவிட வேண்டும். ஏனெனில் உலகெங்கி லும் உள்ள இந்துக்கள் மத்தியில் புதி தாக கண்டறியப்பட்ட ஆக்ரோஷம் உள்ளது” என்றும் அவர் கூறியிருந் தார். மோகன் பகவத்தின் இந்தப் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே கண்டனம் தெரிவித் திருந்த நிலையில், அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைத ராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசியும் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் முஸ்லிம்களை வாழ அனுமதிப்பதற்கும், அவர் களின் நம்பிக்கையைப் பின்பற்று மாறு கூறுவதற்கும் மோகன் பகவத் யார்? முஸ்லிம்கள் இந்தியராக இருப்பதற்கு நிபந்தனை போடும் அளவுக்கு மோகன் பகவத்துக்கு துணிச்சல் வந்துவிட்டதா. நாங்கள் (முஸ்லிம்கள்) இந்தியர்கள். அல்லா வின் விருப்பத்தின் பேரில் நாங்கள் இந்தியர்களாக இருக்கிறோம். நாங்கள் எங்கள் நம்பிக்கையை விட்டுக்கொடுத்து இங்கு வாழ வர வில்லை. எங்கள் மார்க்கத்தை பின் பற்ற நாக்பூரிலுள்ள சந்நியாசிகள் என்று தங்களைக் கூறிக்கொள்வோ ரின் (ஆர்எஸ்எஸ்) அனுமதியைப் பெற வேண்டிய அவசியமும் எங் களுக்கு இல்லை. ‘வசுதெய்வக் குடும்பம்’ (‘உலக மக்கள் எல்லோ ரும் ஒரே குடும்பம்’) என்ற வார்த்தை யை கூட உச்சரிக்க உங்களுக்கு தகுதியில்லை. சொந்த நாட்டு மக்களை ஜாதியாலும், மதத்தாலும் பிரிக்கும் நீங்கள், ‘வசுதெய்வக் குடும்பம்’ என்றெல்லாம் பேசாதீர் கள்.” என்று ஒவைசி காட்டமாக விமர்சித்துள்ளார். இதேபோல மூத்த வழக்கறிஞ ரும், மாநிலங்களவை உறுப்பினரு மான கபில்சிபலும் மோகன் பகவத்தின் பேச்சை விமர்சித்துள்ளார். இது குறித்து, டுவிட்டரில் பதிவிட்டி ருக்கும் அவர், ‘‘ஹிந்துஸ்தான் ஹிந் துஸ்தானமாக இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அதேபோல் மனிதர்களும் மனிதர் களாக மதிக்கப்பட வேண்டும்’’ என ஆர்எஸ்எஸ்-ஸின் பிளவுவாத மற்றும் மதவாத அரசியலை சாடியுள்ளார்.