states

பிளஸ் 2 தனித்தேர்வர்கள் நீட் கலந்தாய்வில் பங்கேற்க முடியுமா?

புதுதில்லி, பிப்.5- 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழு திய தனித்தேர்வர்கள் நீட் கலந்தாய்வில் பங்கேற்க முடியுமா? என தேசிய மருத்து வக் கவுன்சில் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கேரளத்தைச் சேர்ந்த சிலர் இது தொடர் பாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வை உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கெங்கேலே, நீட் கலந்தாய்வில் பங்கேற்கும் தனித்தேர்வர்கள் 11-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை என இராஜஸ் தான், உத்தரகண்ட், இமாசலப் பிரதேசம், அசாம் ஆகிய மாநில அரசுகள் தெரிவித் துள்ளதை சுட்டிக்காட்டினார்.

தேசிய மருத்துவக் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கவுரவ் ஷர்மா, நீட்  இளம்நிலை தேர்வு கையேட்டின் படி, 10,  12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை திறந்த வெளி கல்வி முறை அல்லது தனியாக தேர்வு எழுதியவர்கள் நீட் தேர்வு எழுதத் தகுதி யற்றவர்கள். மேலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் செய் முறை தேர்வுடன் படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்கள் தவிர்த்து ஏனைய மாநிலங்கள், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய தனித்தேர்வர்களை நீட் தேர்வை எழுத அனு மதித்து வருகின்றன. இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என வாதிட்டார். அப்போது நீதிபதிகள், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் நீட் கலந்தாய்வில் பங்கேற்க முடியுமா? என் பது குறித்து தெளிவான பதில் மனுவை தேசிய மருத்துவ கவுன்சில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசா ரணையை பிப்.8-ஆம் தேதிக்கு தள்ளிவைத் தனர்.