states

ஜஹாங்கீர் புரி ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான தடை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

புதுதில்லி, ஏப். 21 - தில்லியின் ஜஹாங்கீர் புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி களை தற்காலிகமாக நிறுத்த பிறப்பிக்கப்பட்ட தடையாணையை, மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து உச்ச  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மனுதாரர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வும், மாநகராட்சி நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், ஆக்கிரப்புகளை அகற்றுவதை நிறுத்தும்படி உத்தரவு பிறப்பித்த பின்னரும் கட்டடங்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டது? என்ற குற்றச்சாட்டை நீதிமன்றம் தீவிரமான விஷயமாக எடுத்துக் கொள்ளும் என்றும் கூறியுள்ளது. ஜஹாங்கீர் புரி ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான மனுவை, வேறு  அமர்வு மாற்றப்படும் என்று தலைமை  நீதிபதி என்.வி. ரமணா கூறியிருந்ததன் அடிப்படையில், வியாழனன்று இந்த வழக்கு நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர். கவாய் ஆகியோர் அட ங்கிய அமர்வில் விசாரணைக்குவந்தது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ஜாமியா உலமா சபை சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அரசுத் தரப்பில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகி வாதாடினர். கபில் சிபில் தனது வாதத்தை துவங்குகையில், “ஆக்கிரமிப்புகள் தவறுதான். ஆனால், இங்கு நடப்பது என்னவென்றால், ஆக்கிரப்புகளை இஸ்லாமியர்களுடன் தொடர்புப் படுத்துகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார். 

இதைக்கேட்ட நீதிபதி ராவ், “இந்து க்களின் கட்டடங்கள் இடிக்கப்படவில் லையா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கபில் சிபல், “இதை நாங்கள் சொல்லவில்லை. அமைச்சர்கள் சொல்கிறார்கள். இது போன்ற சம்பவங்கள் மற்ற மாநிலங் களில் ராமநவமி ஊர்வலத்தின்போது நடந்தது. ஊர்வலங்களை தங்கள் பகுதிக் குள் கொண்டு வர வேண்டாம் என்று சொன்னவர்களுக்கு என்ன நடந்தது என்று உங்களுக்கே (நீதிபதிகளுக்கு) தெரியும். வீடுகள் இடிக்கப்பட்டு மக்கள் கைது செய்யப்பட்டனர். குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர் களின் வீடுகள் இடிக்கப்பட்ட புகைப் படங்கள் என்னிடம் உள்ளன. இது எந்த மாதிரியான நடைமுறை. சட்டத்தின் ஆட்சியை ஓரங்கட்ட பயத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கிறார்களா” எனக் கேட்டார்.  நோட்டீஸ் உள்ளிட்ட முன்னறிவிப்பு கள் எதுவும் இன்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது, தில்லி மாநக ராட்சி தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “சட்டத் திட்டங் களுக்கு உள்பட்டே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சாலைகளில் மக்கள்  நடக்க கூடிய இடங்களில் உள்ள கடை கள் மட்டுமே அகற்றப்பட்டு இருக் கிறது. சிறிய சிறிய கடைகள் போன்ற வற்றை மட்டுமே இடித்திருக்கிறோம். இஸ்லாமியர்கள் மட்டும் குறி வைக்கப்பட்டதாக சொல்லப்படுவது தவறானது” என்றதுடன், “ஒரு சில நடவடிக்கைகளுக்கு முன்னறிவிப்பு எதுவும் கொடுக்கத் தேவையில்லை” என்றும் தெரிவித்தார். அப்போது, தில்லியில் 731 ஆக்கிர மிப்புகள் உள்ளன. அதில் லட்சக்கணக்  கானோர் வாழ்கிறார்கள். அப்படி யிருக்க ஏன் ஒரு சமுதாய மக்களை மட்டும் குறிவைக்கிறார்கள். ஆக்கிர மிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சைனிக் பார்ம்ஸ் இருக்கிறது. கோல்ஃப் லிங்ஸ் இருக்கிறது. ஆனால், அவர்களை எல்லாம் தொடக்கூடக்  முடியாது. ஏழை மக்களைத்தான் குறி வைப்பீர்களா?” என்று மற்றொரு மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த்தவே ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மேலும், “தில்லி ஜஹாங்கீர் புரி யில் கட்டடத்தை இடிப்பது ஒரு நக ரத்தின் பிரச்சனையல்ல, நாட்டின்  பிரச்சனை. இதை நாம் அனுமதித் தால் பின்னர் நாட்டில் சட்டம் இருக்  காது. தில்லி பாஜக தலைவர் சொன்  னதும் கட்டடத்தை இடிக்க தொடங்கி விட்டனர், என்ன நியாயம் இது?” என்றும் வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் வாதிட்டார்.

இறுதியாக, சரி, உங்களுக்கு எந்த மாதிரியான நிவாரணம் வேண்  டும் என கபில் சிபலிடம் நீதிபதி கேள்வி எழுப்ப, “நீங்கள் ஆக்கிர மிப்பை ஒரு சமுதாயத்துடன் தொடர்  புப் படுத்தக்கூடாது. ஆக்கிரமிப்பு களில் இருந்து எந்த சமுதாயம் விதி விலக்கு இல்லை. ஆக்கிரமிப்பு  செய்துள்ளார்கள் என்று சொல்லி உங்களால் சாதாரணமாக இடித்து விட முடியாது. இந்த நீதிமன்ற அவை சட்டத்தின் ஆட்சி இங்கு நடப்பதை உறுதி செய்ய வேண்டும். கட்டடங் கள் இடிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்” என கபில் சிபல் கேட்டுக் கொண்டார். உடனே, “நாடு முழுவதும் நடக்கும் கட்டட இடிப்புகளை தடுக்க முடியது” என நீதிபதி ராவ் தெரி விக்க, இதுபோல் புல்டோசர் மூலம் வீடுகள் தகர்க்கப்படுவதையே நிறுத்த வேண்டும் என்று நான் சொன்னேன்” என கபில் சிபல் விளக்  கம் அளித்தார். இதையடுத்து, ஜஹாங்கீர் புரி யில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவ தற்கு தற்காலிகமாக பிறப்பிக்கப் பட்ட தடையை மேலும் 2 வாரங்க ளுக்கு நீட்டிப்பதாக அறிவித்த உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த விவகா ரத்தில் மனுதாரர்கள் பிரமாணப் பத்தி ரம் தாக்கல் செய்யவும், மாநகராட்சி நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்ய வும் உத்தரவிட்டது.