பிரகாஷ்ராஜ், மேதா பட்கருக்கு எதிர்ப்பு
பாஜக எம்.பி.,க்கள் அடாவடி
புதுதில்லி ஒன்றிய அரசின் ஊரக வளர் ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கான நாடாளு மன்ற நிலைக்குழு கூட்டம், காங்கி ரஸ் எம்.பி., சப்தகிரி சங்கர் உலக்கா (ஒடிசா) தலைமையில் தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நில வளங் கள், பஞ்சாயத்து ராஜ் துறைகள் தயாரித்த இரண்டு வரைவுத் தீர்மா னங்கள் குறித்து விவாதிக்கத் திட்ட மிடப்பட்டிருந்தது. பல்வேறு தொண்டு நிறுவனங்களின் (என்ஜிஓ) பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அழைக்கப்பட்டிருந்தனர். மிக முக்கியமாக புனர்வாழ்வு உரிமை கள் குறித்த தங்களின் பார்வைக ளை முன்வைப்பதற்காக சமூக ஆர்வலர் மேதா பட்கர், நடிகர் பிர காஷ்ராஜ் உள்ளிட்ட சிலர் கூட்டத் தில் கலந்துகொண்டனர். ஆனால், மேதா பட்கர், பிரகாஷ் ராஜ் ஆகி யோர் கூட்டத்தில் பங்கேற்றதற்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.பி., சப்தகிரி சங்கர் உலக்கா, விளக்கம் அளித் தார். ஆனால் பாஜக எம்பிக்கள் பதிலை ஏற்காமல் அமளியில் ஈடு பட்டனர். இதையடுத்து, தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளைப் பேச அழைத்தபோது, பாஜக எம்.பி.,க்கள் கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்தனர். ஆயினும் கூட்டம் தொடர்ந்தது.சிறிது நேரத்தில் சபா நாயகர், கூட்டத்தை தொடரக் கூடா தென தாக்கீது அனுப்பி நிறுத்தச் செய்துள்ளார். இதனால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.