states

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுதில்லி, மார்ச் 22- பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 22 செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து எரிபொருள் விலையை உயர்த்தி வருகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் கஷ்டப் படுவதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத பிரதமர் மோடி யும் அவரது அரசும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. இதனால் மோடி அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் கோபம் எழுந்துள்ளது.  5 மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக எரிபொருள் விலை உயர்த்தப்படாமல்,  137 நாட்களுக்குப் பிறகு பெட் ரோல், டீசல் விலை ஏற்றப்பட்டுள்ளது. லிட்டருக்கு தலா 80 காசுகள் பெட்ரோல், டீசல் உயர்த்தப்பட்டது வாகன ஓட்டி களுக்கும் மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டு  உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் உருளை ஒன்று ரூ.50 அதிகரித்துள்ளது.  இந்நிலையில், இந்த விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். மக்களவையில் இருந்து காங்கி ரஸ், திமுக, இடதுசாரிகள்,திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவையிலும் அவை தொடங்கியவுடன் விதி எண் 267-ன் கீழ் விவா திக்க அனுமதி கோரி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. ஆனால், அவைத் தலைவர் அனுமதி தராத காரணத்தால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். இதனைத் தொட ர்ந்து மாநிலங்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைக் கப்பட்டது.