புதுதில்லி, டிச.27- நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 108 பேரும், தில்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 41, கேரளத்தில் 38, தமிழக த்தில் 34, கர்நாடகத்தில் 31, ராஜஸ்தானில் 22 பேரும் ஒமைக் ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர ஹரியானா, ஒடிசா, ஆந்திராவில் தலா நான்கு பேரும், மேற்கு வங்கத்தில் ஆறு பேரும் ஜம்மு-காஷ்மீர் மூன்று பேரும், உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேரும், சண்டீகர், லடாக், உத்தர கண்டில் தலா ஒருவரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.