லக்னோ, மார்ச் 16- உத்தரப்பிரதேச சட்டப்பேர வைத் தேர்தலில் நூற்றுக்கும் அதி கமான தொகுதிகளில் மாயாவதி யின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும், பாஜகவுக்கும் மறைமுக புரிந்து ணர்வு இருந்ததாக சுகல்தேவ் பார திய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் குற்றம் சாட்டி யுள்ளார். பாஜக பெரும்பான்மை எண் ணிக்கையைப் பெற இந்த புரிந்து ணர்வே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக ஓம் பிர காஷ் ராஜ்பர் மேலும் கூறியிருப்ப தாவது: பகுஜன் சமாஜ் கட்சியும், பாஜகவும் கலந்ததால் பெரிய ஆட்டமாக (பாஜக பெரும்பான் மையுடன் வெற்றி) உருவெடுத் தது. பூர்வாஞ்சலில் உள்ள 122 இடங்களுக்கு, பாஜக அலுவல கத்தில் வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு, பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்களை என்னால் வழங்க முடியும். 4 முறை ஆட்சியில் இருந்த கட்சிகள், அது பகுஜன் சமாஜ் அல்லது காங்கிரஸாக இருக்க லாம், அவர்கள் பாஜக-வை ஆத ரித்துள்ளனர். இல்லாவிட்டால் அவர்களின் வாக்குகள் எங்கே போயின? சட்டப்பேரவைத் தேர் தல் தொடர்பாக எங்க கட்சியிலும் சுயவிமர்சனம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதனடிப்படை யில், எங்களின் குறைபாடுகளை யும் சரி செய்ய முயற்சிப்போம். இவ்வாறு ஓம் பிரகாஷ் ராஜ்பர் குறிப்பிட்டுள்ளார். உ.பி. தேர்தலில் சமாஜ்வாதி கட்சி கூட்டணியில் போட்டியிட்ட சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, 6 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.