states

img

கிரிமினல் குற்றம்: பாஜக எம்எல்ஏ-க்களே முதலிடம்!

லக்னோ, மார்ச் 14 - உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதி தாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற  உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட் டோர் பெரும் பணக்காரர்கள் மற்றும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த இரண்டு வகைப் பாட்டிலும் பாஜக சட்டமன்ற உறுப்பி னர்களே முதலிடம் பிடித்துள்ளனர்.  உ.பி.-யின், புதிய எம்எல்ஏ-க்களில்  91 சதவிகிதத்தினர் (366 பேர்) கோடீஸ் வரர்கள் ஆவார்கள். கடந்த 2017- இல் இது 322 என்ற எண்ணிக் கையிலேயே இருந்தது குறிப்பிடத் தக்கது. மேலும், புதிய எம்எல்ஏ-க்களில் பாஜக-வில் 233 பேர், சமாஜ்வாதியில் 100 பேர், அப்னாதளத்தில் 9 பேர், ராஷ்டிரிய லோக்தளத்தில் 7 பேர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உ.பி. எம்எல்ஏ-க்களின் சராசரி சொத்து  மதிப்பு ரூ. 8.06 கோடியாக உள்ளது. இதில், பாஜக எம்எல்ஏ-க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 8.14 கோடி யாகவும், சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ-க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 7.39  கோடியாகவும், அப்னாதளம் கட்சி எம்எல்ஏ-க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 7.13 கோடி என்ற அளவிலும்  உள்ளது. அதுமட்டுமல்லாமல், புதிய எம்எல்ஏ-க்கள் 403 பேரில் 51 சதவி கிதத்தினர், அதாவது 205 பேர் கிரி மினல் எனும் குற்றப் பின்னணி கொண்டவர்கள். கடந்த 2017-இல் இந்த எண்ணிக்கை 143 ஆக (36 சதவி கிதம்) இருந்தது. இதிலும் குறிப்பாக,  39 சதவிகித எம்எல்ஏ-க்கள், அதாவது,  158 பேர் தங்கள் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு  எதிரான குற்றங்கள் தொடர்பான வழக் குகள் இருப்பதை ஒப்புக் கொண்டுள் ளனர். 2017-இல் இந்த எண்ணிக்கை 26  சதவிகிதமாகவே (107 பேர்) இருந்தது முக்கியமானது. பாஜக-வில் 111 எம்எல்ஏ-க்கள், சமாஜ்வாதியில் 71 எம்எல்ஏ-க்கள், ராஷ்டிரிய லோக்தளத்தில் 7 எம்எல்ஏ- க்கள் கிரிமினல் பின்னணி கொண்டவர் களாக உள்ளனர். இதனை தேர்தல் கண்காணிப்பு  மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக் கான சங்கம் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.