பாலசோர், ஜூன் 6 - 278 பேரின் உயிர்களைப் பலிவாங்கி யிருக்கும், ஒடிசா ரயில் விபத்துச் சம்பவம் தொடர்பாக சிபிஐ தனது விசாரணையைத் துவங்கியுள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு உள்ளான பகானகா பகுதிக்கு 10 பேர் கொண்ட குழுவாக சிபிஐ அதிகாரிகள், செவ்வாயன்று நேரில் சென்று விசாரணையை மேற்கொண்ட னர். ரயில் விபத்து நடந்த விதம், விபத்துக்கான காரணம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசார ணை நடத்தினர். சம்பவ இடத்தில் விபத்து தொடர்பாக ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா? எனவும் அதிகாரிகள் ஆய்வு செய்து மேற்கொண்டனர். ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்களும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட கோர விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது. ஆயி ரத்து 175 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் சுமார் 900 பேர், சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்; எஞ்சியவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவ தாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. பலியா னோரின் உடல்களை அடையாளம் காணும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டுள்ளது. முன்னதாக, இந்த கோர விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே உத்தர விட்டிருந்தது. அதன்படி உயர்மட்டக் குழுவும் விசாரணை நடத்தி, “பகானகா பஜார் ரயில்நிலையத்துக்கு முன்பு பிரதான ரயில் பாதையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி சென்று கொண்டி ருந்தது. அந்த ரயில் தொடர்ந்து செல்ல பச்சை நிற சிக்னல் வழங்கப்பட்டது. ஆனால், திடீரென அது மாற்றப்பட்டதால் பக்கவாட்டில் உள்ள மற்றொரு தண்டவாளத்துக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, கோர மண்டல் எக்ஸ்பிரஸ் மோதியது” என்று தனது முதற்கட்ட விசாரணையில் தெரிவித்து இருந்தது.
ரயில்கள் மோதலுக்கு மனிதத் தவறு காரணமா? அல்லது சிக்னல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், “விபத்தின் பின்னணியில் சதி வேலை இருக்கக்கூடும்” என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். அத்துடன், உண்மையைக் கண்டுபிடிப்ப தற்காக சிபிஐ விசாரணைக்கும் ரயில்வே வாரி யம் பரிந்துரை செய்து இருப்பதாககூறப்பட்டது. ஆனால், சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக் கும், ரயில்வே வாரியத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது உண்மையான பிரச்சனைகளைத் திசைத்திருப்புவதாகும். விபத்திற்கு காரணமான அரசின் அலட்சி யத்தை மறைத்து, கிரிமினல் வடிவம் கொடுக்கும் முயற்சியாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்தியாவில் இதுவரை நடந்துள்ள பெரிய ரயில் விபத்துக்கள் அனைத்தையும் ரயில்வே உயர்மட்டக் குழுதான் விசாரித்துள்ளது. தற்போ துதான், முதல் முறையாக சிபிஐ விசார ணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது; இதில் ஏதோ சூது அடங்கியிருக்கிறது என்றும் சந்தேகங் களை எழுப்பினர். எனினும், இந்த விமர்சனங் களை, மோடி அரசு கவனத்தில் கொள்வதாக இல்லை. இந்த பின்னணியிலேயே, ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக, சிபிஐ தனது விசாரணை யைத் துவங்கியுள்ளது. முன்னதாக, ரயில்வே உயர்மட்டக்குழு ஏற்கெனவே தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக ஆய்வு நடத்தி சேகரித்த தகவல்களை சிபிஐ வசம் ஒப்படைத்தது. அதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை செவ்வாயன்று துவங்கினர். 3 ரயில்கள் மோதி விபத்துக்கு உள்ளான இடத்திலும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.