டேராடூன், ஜன.17- உத்தரகண்ட் மாநில பாஜக அமைச்சர் ஹரக் சிங் ராவத், பதவியிலிருந்து நீக் கப்பட்ட நிலையில், அவர் காங்கிரசில் இணைவார் என்று தகவல்கள் வெளி யாகியுள்ளன. உத்தரகண்டில் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அமைச்ச ரவையில் இடம்பெற்றிருந்த வர் ஹரக் சிங் ராவத். காங் கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவரை பதவி ஆசைகாட்டி, கடந்த 2016-ஆம் ஆண்டு பாஜக தன் பக்கம் இழுத்தது. அவ ருக்கு அமைச்சர் பதவியும் வழங்கியது. ஆனால், ஹரக் சிங் ராவத் அண்மைக் காலமாக பாஜக ஆட்சி மீது அதிருப்தி யில் இருந்து வந்தார். குறிப் பாக, ஹரித்துவாரில் மருத்து வக் கல்லூரி அமைக்க வேண் டும் என்ற அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பதற் காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில்தான், உத்தரகண்ட் சட்டப்பேர வைக்கு பிப்ரவரி 14 அன்று வாக்குப்பதிவு நடைபெற வுள்ள நிலையில், ஹரக் சிங் ராவத் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட தாக கூறி, அவரை அமைச்சர வையில் இருந்து நீக்கி முதல் வர் புஷ்கர் சிங்தாமி ஞாயி றன்று உத்தரவிட்டார். இதையடுத்து, பாஜக வில் இருந்து நீக்கப்பட்ட ஹரக் சிங் ராவத் எம்எல்ஏ மீண்டும் காங்கிரசில் இணை யலாம் என தகவல்கள் வெளி யாகியுள்ளன.