states

வறுமை ஒழிந்துவிட்டதாம் - நிதி ஆயோக் அறிக்கை அபத்தம்!

புதுதில்லி, ஜன.16- 2022-23-ஆம் ஆண்டு வரை யிலான கடந்த ஒன்பது ஆண்டு களில் பல்வேறு பரிமாண வறுமை யிலிருந்த 24.82 கோடி பேர் மீட்கப் பட்டுள்ளனர் என்று நிதி ஆயோக் தனது அறிக்கையில் தெரிவித்துள் ளது. பல்வேறு பரிமாண நிலைகள் என்பது சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட 12 வளர்ச்சி நிலைகளை உள்ளடக்கியது என்கிறது நிதி ஆயோக். இந்தியாவில் பல்வேறு பரிமாண வறுமை 2013-14-ஆம் ஆண்டில்  29.17 சதவீதத்திலிருந்து 2022-23-ஆம்  ஆண்டில் 11.28 சதவீதமாகக் குறைந்து ள்ளது என்றும் இந்த காலகட்டத்தில் சுமார் 24.82 கோடி மக்கள் வறுமை யிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.  உத்தரப் பிரதேசத்தில் 5.94 கோடி  பேர், பீகாரில் 3.77 கோடி பேர், மத்தி யப் பிரதேசத்தில் 2.30 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்றும்; போஷன் அபியான், முக்த் பாரத், உஜ்வாலா போன்ற ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்கள் மக்க ளின் வறுமையைப் போக்க உதவி யாக இருந்தது என்றும் நிதிஆயோக் அறிக்கை கூறுகிறது.  மேலும் 2020-ஆம் ஆண்டுக்கு முன்பே பல பரிமாண வறுமை சரிபாதி யாகக் குறையும் என்றும் நிலையான வளர்ச்சி இலக்கை அடையுமென்றும் கூறியுள்ளது. நிதி ஆயோக் அறிக்கை குறித்து  பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,   “நிதி ஆயோக் அறிக்கை மிக வும் ஊக்கமளிப்பதாக உள்ளது. உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும்  மேம்படுத்துவதற்கான உறுதிப் பாட்டை பிரதிபலிக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றங்களைச் செய்வதில் அறிக்கை கவனம் செலு த்துகிறது” எனப் பதிவிட்டுள்ளார். “அனைத்துத் துறை வளர்ச்சிக்கும், ஒவ்வொரு இந்தியருக்கும் வள மான எதிர்காலத்தை உறுதி செய்வ தற்கும் நாங்கள் தொடர்ந்து பணி யாற்றுவோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்

இருப்பினும் வல்லுநர்கள், பல பரிமாண வறுமைக் கோட்டை  தீர்மானிப்பதற்கு பயன்படுத்தப் பட்டுள்ள தரவுகள் குறித்து பல்வேறு கேள்விகளை யெழுப்பியுள்ள தாக “தி டெலிகிராப்” செய்தி வெளி யிட்டுள்ளது. ஓய்வுபெற்ற இந்தியப் பொருளா தாரத்துறை அதிகாரி கே.எல்.தத்தா கூறுகையில், “நிதி ஆயோக் அறிக்கை வறுமையைப் பிரதி நிதித்துவப்படுத்துவதற்குப் பதிலாக பல பரிமாணம் கொண்ட வறுமை யிலிருந்து மீண்டவர்களை முன் வைத்துள்ளது. இது சரியானதல்ல” எனக் கூறியுள்ளார்.  பொருளாதார நிபுணர் சுனில் ரே, முன்னாள் இயக்குநர் ஏ.என்.சின்ஹா ஆகியோர் “ஒரு நாடு அதன் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான மக்கள் உயிர்வாழ்வதை [தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம்] உறுதி செய்ய வேண்டி யிருக்கும் போது, ஒரு நாடு எப்படி நிலையான வளர்ச்சி இலக்கை அடைய முடியும்? மக்கள் சுயசார்பு அடையவில்லை என்பதால் தான் அரசு இலவசங்களை வழங்குகிறது” என்கின்றனர். கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டுமல்ல, இப்போதும் பல பரி மாண வறுமை என்பது குறைந்து  வருகிறது. 2014- ஆம் ஆண்டு மத்தி யில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நட வடிக்கைகளும் வறுமை குறை வதற்கான காரணம் என ஆய்வுகள் தெரிவிப்பதாக ஆய்வாளர்கள் கூறி யதை டெலிகிராப் வெளியிட்டுள்ளது. நிதி ஆயோக் கூற்றுப்படி பல்வேறு நிலைகளிலிருந்து மக்கள் மீண்டுள்ளார்கள் என்றால்,  “2023-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம்  தேதி இரண்டு ஐரோப்பிய ஏஜென்சி கள் வெளியிட்ட உலகளாவிய பசிக் குறியீட்டு அறிக்கையில் 125 நாடு களில் இந்தியா 111- ஆவது இடத்தில் உள்ளது. உலகப் பசிக் குறியீட்டில் இந்தியா ஏன் பின் தங்கியுள்ளது எனவும் ஆய்வாளர்கள்  கேள்வி யெழுப்பியுள்ளனர்.