states

img

‘ஹிப்போக்ரட்ஸ்’ அல்ல; இனி ‘மகரிஷி சரகா’ உறுதிமொழிதான்!

புதுதில்லி, பிப்.12- இந்தியாவில் மருத்துவப் படிப்பு வகுப்புகள் தொடங்குவதற்கு முன் பாக மாணவர்கள், ‘ஹிப்போக்ரட்ஸ் உறுதிமொழி’ (Hippocratic oath) ஏற் பது வழக்கமாக உள்ளது. “திறமை மற்றும் முடிவெடுக்கும் திறன் அடிப்படையில் உறுதிமொழி யை நிறைவேற்றுவேன். நான் எனது சக்திக்கு உட்பட்டு, எந்தத் தீங்கும் செய்யாமல், நியாயமான வகையில் நோயாளிகளைக் காத்து நிற்பேன்” என்பதுதான் ‘ஹிப்போக்ரட்ஸ் உறுதி மொழி’ ஆகும். ஹிப்போக்ரட்ஸ், மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர். கி.மு. 400-களில் கிரேக்க நாட்டில் வாழ்ந்தவர். மருத்துவத்தையும் தத்து வத்தையும் பிரித்துக் காட்டிய முதல் சிந்தனையாளர் ஹிப்போக்ரட்ஸ் ஆவார்.

சமயம், மூடநம்பிக்கை, தத்துவம் என்பதில் இருந்து மருத்துவத்தை விடுவித்து மருத்துவத்தை சுயாதின  அறிவியல் பாதைக்குக் கொண்டு சென்ற பெருமை இவருக்கு உண்டு. நோய்களும், நோய்த் தடுப்பு முறை களும் சில இயற்கை விதிகளுக்கு உட்பட்டது என்பதைக் கண்டறிந்தார். மேலும், மருத்துவர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகளையும் (Code of Conduct) ஏற்படுத்தினார்.  அந்த வகையில், இவரின் அரிய  மருத்துவக் கோட்பாடுகளை கடை பிடிக்கும் விதமாக உலகின் பல நாடு களில், மருத்துவப் படிப்பைத் தொடங் கும் போதும், பட்டம் பெறுவதற்கு முன் பாகவும் ‘ஹிப்போக்ரட்ஸ் உறுதி மொழி’ எடுத்துக் கொள்வது வழக்க மாக உள்ளது. “நோய்த் தீர்க்கும் அப்பல்லோ, அஸ்கிலிபியஸ், ஹைஜியா, பனே சியா உள்ளிட்ட அனைத்து உடல்நலக் கடவுள்கள் மீது சத்தியம் செய்கிறேன். இவர்களை ஆதாரமாக கொண்டு திறமை மற்றும் முடிவெடுக்கும் திறன் அடிப்படையில் உறுதிமொழியை நிறைவேற்றுவேன். நான் எனது சக்திக்கு உட்பட்டு, எந்தத் தீங்கும் செய்யாமல், நியாயமான வகையில் நோயாளிகளைக் காத்து நிற்பேன்” என்பதுதான் ஹிப்போக்ரட்ஸ் உறுதி மொழி ஆகும். 

இந்நிலையில், இந்தியாவிலுள்ள மருத்துவ மாணவர்கள் இனிமேல்  ஹிப்போக்ரட்ஸ் உறுதிமொழிக்குப் பதிலாக ‘மகரிஷி சரகா’ பெயரி லேயே உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (National medical commission) திடீர் உத்தரவு ஒன்றைப் பிறப்பித் துள்ளது. இதுகுறித்து சுற்றறிக்கை ஒன்றை ஆணையம் அனுப்பியுள்ளது. அதில், “முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 2022 பிப்ரவரி 14 அன்று துவங்கும். அப்போது மருத்துவப் படிப்புகளுக்கான வெள்ளையங்கி அணியும் நிகழ்ச்சியில் (White- Coat Ceremony) எடுக்கப்படும் ஹிப்போக்ரட்ஸ் உறுதிமொழிக்குப் பதிலாக, தேசிய மருத்துவ ஆணை யத்தில் இடம்பெற்றுள்ள ‘மகரிஷி சரகா சபதம்’ எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது. எவ்வாறு மருந்துகள் தயாரித்து அவற்றை நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் “சரகா சம்ஹித” என்ற நூலை  சரகா எழுதியிருப்பதாகவும், அதில் அறிவுத்திறன், சேவை மனப் பான்மை, தெளிவான மனம் மற்றும் நலமான உடல் என மருத்துவருக் கான தகுதிகளையும் சரகா வரை யறுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவத்தை இந்தியமயம் ஆக்குகிறோம் என்ற பெயரில், தனது காவி அரசியலையும், பழமைவாதத்தையும் மோடி அரசு திணிப்பதாகவும், இதன்மூலம் நவீன அறிவியல் மனப்பான்மையை சிதைப் பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந் துள்ளன.