states

img

வன்முறையை சகிக்க முடியாது என கூறுவாரா? பிரதமரின் கண்டிப்புக்காக நாடே காத்திருக்கிறது!

ஜெய்ப்பூர், ஏப்.12- சங்-பரிவாரங்களின் வன் முறையில் நாடு சிக்கித் தவிக் கும் நிலையில், ‘வன்முறையை  எந்தச் சூழலிலும் சகிக்க முடி யாது’ என பிரதமர் மோடி கூறு வார் என்று நாடே காத்துக் கொண்டிருப்பதாக அசோக் கெலாட் கூறியுள்ளார். ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவரு மான அசோக் கெலாட் ஜெய்ப்பூ ரில் இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது: “ராமநவமி நாளில் சில மாநி லங்களில் வன்முறை வெடித் தது. ராமர் பிறந்த நாளில் வன் முறை ஏற்பட்டு உள்ளது. நாடு  எந்த திசையில் சென்று கொண் டிருக்கிறது என நீங்கள் சிந் தித்துப் பாருங்கள்.  வன்முறையைத் தூண்டு வோர் தப்ப முடியாது என நாட்டு மக்களுக்கு பிரதமர் கூற வேண் டும். ஆனால், ‘வன்முறையை எந்தச் சூழலிலும் சகித்துக் கொள்ள முடியாது’ என பிரத மர் மோடி எப்போது பேசுவார் என்று நாடே காத்துக் கொண்டி ருக்கிறது. அதுபோன்றதொரு அறிக்கை எதுவும் வெளியிடப் படாத நிலையில், வன்முறை பல இடங்களில் பரவி வரு கிறது. இந்திய விடுதலைக்காக நமது தலைவர்கள் செய்த தியா கங்களை மக்கள் மறக்க செய் யும் முயற்சிகள், சதி திட்டமொ னறின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டில் இது போன்ற சூழல் உருவாக்கப்படு வது முறையானதல்ல. ஒவ்வொருவரிடத்திலும் அன்பு, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம் இருக்க வேண்டி யது அவசியம். அப்போதுதான் நாடு முன்னேற முடியும்.” இவ்வாறு கெலாட் கூறி யுள்ளார்.