புதுதில்லி ஏப்.24- ஒன்றிய அரசு ஒப்புதல் தராமல் இழுத்தடித்ததன் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த, ஒடிஷா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதர் ராவ், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக முக்கியமான தீர்ப்பு வழங்கிய நீதிபதி களின் பட்டியலில் இடம்பெறுபவர் நீதி பதி முரளிதர் ராவ், 1984-ஆம் ஆண்டு தில்லி சீக்கியர் இனப்படுகொலை வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்தவர் நீதிபதி முரளிதர் ராவ். கடந்த 2020-ஆம் ஆண்டு அமைதி யாக நடைபெற்றுக் கொண்டிருந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை இந்துத் துவா குண்டர்கள் சீர்குலைக்கும் வகை யில் வன்முறைகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். அப்போது நீதிபதி முரளிதர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தில்லி போலீஸ் ஏன் அமைதியாக இருக்கிறது என கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கை விசாரித்து பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக நடவடிக்கை என்ற உத்தரவு பிறப்பித்த அடுத்த நாளே நீதிபதி முரளிதர் ராவ், பஞ்சாப்- ஹரியானா உயர்நீதி மன்றத்துக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.
இது மிகப்பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், இது வழக்கமான இடமாறுதல் என ஒன்றிய அரசு சமாளித்தது. அதன் பின்னர் ஒடிஷா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் முரளிதர் ராவ் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு (2022) சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முரளிதர் ராவை கொலிஜியம் குழு பரிந்துரை செய்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தது. கொலிஜியத்தின் பல்வேறு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கிய ஒன்றிய அரசு, நீதிபதி முரளிதர் ராவ் இடமாற்ற பரிந்துரையை மட்டும் கிடப்பில் போட்டது. பின்னர் வேறுவழியில்லாமல் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலா வை (மகாராஷ்டிரா) ஒன்றிய அர சுக்கு உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் குழு பரிந்துரைத்து, சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக முரளி தரை நியமிக்கும் பரிந்துரையையும் கொலிஜியம் திரும்பப் பெற்றது. தற்போது உச்சநீதிமன்ற நீதிபதி களாக இருக்கும் சிலர் பணி ஓய்வு பெற உள்ளனர். இதனால் நீதிபதி முரளி தர் உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்ற நீதி பதிகளாக நியமனம் செய்யப்படலாம் என ஊடகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன.