புதுதில்லி,பிப்.11- கேரளா, மேற்குவங்கத்தை போல உத்தரப்பிர தேசம் மாறிவிடக்கூடாது என்று பேசிய உத்தரப்பிர தேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைக் கண்டித்து பிப்ரவரி 11 அன்று மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் யோகி ஆதித்யநாத், தேர்தலில் பாஜக தோற்றால் உத்தரப்பிரதேச மானது கேரளா, மேற்குவங்கம் மாநிலம் போல் ஆகிவிடும் என்று தெரிவித்தார். கேரளா, மேற்குவங்க மாநிலங்கள் குறித்து கீழ்த்தரமான கருத்தை தெரிவித்த யோகி ஆதித்யநாத் பேச்சு குறித்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவை யில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்திரு ந்தனர். ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட தால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரி வித்தனர். பின்னர் அவையில் இருந்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.