states

img

மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட் நாடாளுமன்ற வீதியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

புதுதில்லி, மார்ச் 1- மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து, செவ்வாய் அன்று புதுதில்லி நாடா ளுமன்ற வீதியில் கண்டன தர்ணா போராட்டம் நடைபெற்றது. நூற்றுக் கணக்கானவர்கள் பங்கேற்றார்கள். தர்ணா போராட்டத்தில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது: மோடி அரசாங்கத்தின் பட்ஜெட், மக்கள் மீது ஏவப்பட்டுள்ள மோசமான தாக்குதலாகும். பொதுத் துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கப்பட்டுக் கொண்டி ருக்கின்றன. பொதுத்துறை வங்கி களிலிருந்து கார்ப்பரேட்டுகள் வாங்கிய பல லட்சம் கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டி ருக்கின்றன. 

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவிலிருந்த பெரும் பில்லியனர்களின் எண்ணிக் கையில் மிகப்பெரிய உயர்வு ஏற்பட்டிருக்கிறது. பொதுச் சொத்துக்களைச் சூறையாடியே இவர்கள் பெரும் பில்லியனர்களா னார்கள். இதைத்தான் மோடி அர சாங்கம் வளர்ச்சி என்று  பிரச்சா ரம் செய்து கொண்டிருக்கிறது. ஏழை களுக்கும் பணக்காரர் களுக்கும் இடையேயான இடைவெளி அதி கரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 23 கோடிப் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டிருக்கிறார்கள். மக்களின் வாங்கும் சக்தியை  அதிகரித்திடாமல் பொருளா தாரத்தை மீட்டெடுத்திட முடியாது. அரசாங்க முதலீடுகளை அதிகரித் திடாமல் வேலையின்மைப் பிரச்ச னைக்குக் தீர்வு காண முடியாது. ஆனால் மோடி அரசாங்கம் இதற்கு நேர் விரோதமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உண வுப் பொருள்கள் மீதும், அத்தியா வசியப் பண்டங்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் மீதும் ஜிஎஸ்டி வரி விதிப்பதன் மூலம் மக்களின் சட்டைப் பைகளில்  உள்ள பணம் அரசாங்கத்தால் ‘பிக் -பாக்கெட்’  அடிக்கப்படுகிறது. மக்க ளுக்கு மலிவாக அளிக்கப்பட்டு வந்த ரேஷன் பொருள்கள்கூட இந்த பட்ஜெட்டில் பறிக்கப்பட்டுவிட்டன.

இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் அதிருப்தி மனப்பான்மையை மடை  மாற்றம் செய்வதற்காக, மக்கள்  மத்தியில் மதவெறித் தீ விசிறி விடப்படுகிறது. இத்தகு சூழ்நிலை யில் மோடி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக மிக விரிவான அளவில் மக்களை அணி திரட்ட வேண்டியது அவசிய மாகும். பாஜக-வை முறியடித்திட நாட்டில் உள்ள அனைத்து இடது சாரிக் கட்சிகள் மற்றும் இதர மதச் சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை இன்றைய தினம் அவசிய மாகும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார். கட்சியின் தில்லி மாநில செயலா ளர் கே.எம்.திவாரி மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க இணைச் செயலாளர் விக்ரம் சிங் உள்ளிட்ட தலைவர்களும் உரையாற்றினார்கள்.