புதுதில்லி, டிச.4- 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 2 நில வரப்படி தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களின் ஊதியத்திற்காக ரூ.5,102, கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தில் முரண் பாடுகள் உள்ளதாகவும் ‘வசதி படைத்த மாநிலங்கள்’ நிதியை தங்க ளுக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டதாகவும் பிரதமர் மோடி கூறி யுள்ளார். பிரதமர் மோடி, கிராமப்புறத் துறை குறித்த சமீபத்திய ஆய்வுக் கூட்டத்தில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் உள்ள முக்கிய முரண்பாடுகளை சுட்டிக்காட்டியதாகவும், ஒன்றிய அரசு தனது 16-வது ஆண்டில் 100 நாள் வேலைத்திட்டத்தை ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்துள்ள தாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் திட்டம் வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டது என்று பிர தமர் கூறியதாக தெரிவித்த அந்த அதி காரிகள், ஏழை மாநிலங்கள் 100-நாள் வேலைத்திட்ட நிதியில் தேவையான பங்கைப் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டியதாகக் கூறினர். பல்வேறு மாநிலங்களில் பணி யின் தன்மையில் உள்ள முரண்பாடு களை மோடி சுட்டிக்காட்டியதாகவும், அவை தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் அதிகாரி கள் கூறினர். பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தர பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் நடப்பு நிதியாண்டில் 100 நாள் வேலைக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 45,770 கோடியில், ரூ.17,814 கோடி யை இதுவரை செலவிட்டுள்ளன. . தேசிய குடும்ப சுகாதார கணக்கெ டுப்பு 2019-21- இன் படி, இந்தியா வின் 64.5% ஏழை மக்கள் தொகை யைக் கொண்ட ஆறு மாநிலங்கள்,
இந்த ஆண்டு இதுவரை 38.9 சதவீத நிதியைப் பயன்படுத்தியுள்ளன. 2022 டிசம்பர் 2 நிலவரப்படி உத்தர பிரதேசத்தில் ரூ.5,157 கோடி, தமிழ் நாடு ரூ.5,102 கோடி, இராஜஸ்தா னில் ரூ.4,144 கோடி, பீகார் ரூ.4,030 கோடி, சத்தீஸ்கர் ரூ.1,061 கோடி, ஜார்கண்ட் ரூ.1,325 கோடி, மத்திய பிரதேசம் ரூ.3,397 கோடி மற்றும் ஒடிசா ரூ2,842 கோடி தொழிலாளர் ஊதியத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் கிராமப்புற மேம்பாட்டுத்துறை செயலர் ஜுகல் கிஷோர் மொஹபத்ரா கூறுகையில் “ஏழை மாநிலங்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் அதிக நிதியைக் கோரும் திறனோ அல்லது உள்கட்ட மைப்பு வசதியோ இல்லை. எனவே மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட உள்கட்டமைப் பில் மாற்றம் செய்ய வேண்டும்” என்கிறார். இதற்கிடையில், இந்தத் திட் டத்தை மறுஆய்வு செய்ய முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமர்ஜித் சின்ஹா தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை ஒன் றிய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் பேராசிரியர்கள் அசோக் பங்கஜ், சோனால்டே தேசாய், நிதி ஆயோக்கின் சேகர் போனு, ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தலை மைப் பொருளாதார ஆலோசகர் பிரவீன் மஹ்தோ, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்ச கங்கள், நிதி ஆயோக் மற்றும் தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் ஆகிய வற்றின் அதிகாரிகள் இடம் பெற்றுள் ளனர்.