states

img

2 அரசாணைகளை வெளியிட்ட மோடி அரசு மாநிலங்களுக்கான கவுன்சிலின் நிலைக்குழு தலைவரான அமித்ஷா!

புதுதில்லி, மே 24- கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில், சர்க் காரியா கமிஷன் பரிந்துரையின் பேரில், 1990 முதல் மாநிலங்க ளுக்கு இடையேயான கவுன்சில் அமைக்கப்பட்டது. ஒன்றிய - மாநில அரசு களுக்கு இடையே எழும் பிரச்ச னைகளை விவாதித்து தீர்வு காணு வதாக இந்தக் கவுன்சில் உள்ளது. இந்நிலையில், மாநிலங்களு டனான நல்லுறவைப் பேணும், அந்தக் கவுன்சில் மறுசீரமைக் கப்பட்டு உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்  பாக இரண்டு அரசாணைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள் ளது. அவற்றில் கூறப்பட்டிருப்ப தாவது: “மாநிலங்களுக்கு இடையே யான கவுன்சிலும், அதன் நிலைக்  குழுவும் மாற்றி அமைக்கப்பட் டுள்ளன. மாநிலங்களுக்கு இடையி லான கவுன்சிலின் தலைவராக பிரதமர் மோடியும், உறுப்பினர் களாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்  கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர், வீரேந்தர் குமார், ஹர்தீப் சிங் பூரி, நிதின் கட்காரி, எஸ். ஜெய்சங்கர், அர்ஜூன் முண்டா,  பியூஷ் கோயல், தர்மேந்திர பிர தான், பிரகலாத் ஜோஷி, அஸ்வினி வைஷ்ணவ், கஜேந்திர சிங் ஷெகாவத், கிரண் ரிஜிஜூ, பூபேந்தர் யாதவ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, மாநிலங்க ளுக்கு இடையேயான கவுன்சி லின் நிலைக்குழுத் தலைவராக ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவும் உறுப்பினர்களாக நிர்மலா சீதா ராமன், நரேந்திர சிங் தோமர், வீரேந்திர குமார், கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரும் நியமிக்  கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிர தேசம், அசாம், பீகார், குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநில முதல்வர்களும் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.