states

எதிர்க்கட்சித் தலைவர்களின் உரையை அவைக்குறிப்பிலிருந்து நீக்கி அராஜகம்

புதுதில்லி, பிப்.9- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சூடு  பிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலை வர்கள் மோடி அரசுக்கு அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகளை எழுப்பி கிடுக்கிப்பிடி போட்டு வருகின்றனர். ஆண்டுக்கு 2 கோடி வேலை தருவதாக கூறினீர்களே.. 9 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருக்கிறீர்கள்..? நாடு முழுவதும் அரசுத் துறைகளில் காலி யாக இருக்கும் 62 லட்சம் பணியிடங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கை என்ன? விவசாயி களுக்கு உற்பத்திச் செலவைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு கூடுதல் விலை தருவோம் என்று அளித்த வாக்குறுதி என்ன ஆனது? வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை உறுதி செய்வதற்கான சட்டம் எங்கே?  பொருளாதார வளர்ச்சி எங்கே? பொருளா தாரம் வளர்ந்துள்ளது என்றால் விலைவாசி  உயர்வது ஏன்? பணவீக்கம் குறையாதது ஏன்?  பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக் கான வரியை குறைக்காதது ஏன்? மேலும்  மேலும் ஜிஎஸ்டி வரி விகிதத்தை உயர்த்துவது ஏன்?

2023-24 நிதியாண்டில், கல்வி, சுகா தாரம், நூறுநாள் வேலைத்திட்டம் மற்றும் உட்  கட்டமைப்புத் திட்டங்களுக்கான மானியத்தை  வெட்டியது ஏன்? 2014 வரை 53 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நாட்டின் கடனை, 152 லட்சம்  கோடி ரூபாயாக அதிகரித்ததுதான் பொருளா தாரத்தை வளர்த்த லட்சணமா?  ஏழைகள் மேலும் ஏழையாகும் நிலையில்,  பிரதமர் மோடியின் முதலாளி நண்பர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரிப்பது எப்  படி? முதலாளிகளின் வளர்ச்சியைத்தான் நாட்  டின் வளர்ச்சி என்று மோடி கூறுகிறாரா? என்று  அடுக்கடுக்கான கேள்விகளை நாடாளுமன றத்தில் எழுப்பி வருகின்றனர்.  ஆனால், இவை எவற்றுக்கும் முறையான பதிலளிக்காத பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்  கட்சிகளுக்கு தன்மீது பொறாமை, அதனால் சேற்றை வாரி இறைக்கிறார்கள்.. தன்மீது வீசப்  படும் அம்புகளை எல்லாம் மக்கள் என்மீது வைத்துள்ள அன்பு கேடயமாக இருந்து பாது காக்கும் என்று வழக்கம்போல தனது திறமை யான நடிப்பை, நாடாளுமன்றத்திலும் அரங் கேற்றி வருகிறார். 

இதையும் மீறி, எதிர்க்கட்சித் தலைவர்கள் விடாப்பிடியாக சில கேள்விகளை எழுப்பி மோடி அரசை அம்பலப்படுத்தும் நிலையில், அந்த உரையையே நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து நீக்கும் வேலையில் தற்போது இறங்கியுள்ளார். அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் இருக்கும் தொடர்பு குறித்து, காங்கிரஸ் எம்.பி.  ராகுல் காந்தி அதிரடியான பல கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்தார். அதில்  அதானி குறித்த குற்றச்சாட்டுகளை முழுமை யாகவே அவைக்குறிப்பிலிருந்து நீக்கச் செய்  துள்ளார். ராகுல் காந்தியின் 53 நிமிட உரையில்  இடம்பெற்ற 18 கருத்துகள் நாடாளுமன்ற அவைக் குறிப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்  ளன. அவைக் குறிப்புகளில் இருந்து நீக்கப்  பட்ட அந்தக் கருத்துக்களில் பெரும்பாலா னவை அதானி தொடர்பானவை. மும்பை விமான நிலையம் அதானிக்கு கைமாற்றப்பட்டது தொடர்பாக ராகுல் காந்தி  குற்றம் சாட்டியிருந்தார். அந்த குற்றச்சாட்டு நீக்கப்பட்டுள்ளது. 

அதானி குழுமத்திற்கு இஸ்ரேலிடம் இருந்து சில பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கிடைக்க வும், பங்களாதேஷுடன் மின் விநியோக ஒப்  பந்தம் ஏற்படவும், ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந் தியா’ வங்கியின் கடன் கிடைப்பதற்குமான பின்னணியில் பிரதமர் மோடி இருந்தார் என்ற குற்றச்சாட்டும் நீக்கப்பட்டுள்ளது. அதே போல அதானி குழுமம் இலங்கையில் மின்  திட்டத்தில் ஈடுபட்டது பற்றிய குற்றச்சாட்டும்,  அதானியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த கேள்விகளும் கூட அவைக்குறிப்பிலி ருந்து நீக்கப்பட்டுள்ளன. தனது உரையின் பகுதிகள் நீக்கப்பட்டது குறித்து வீடியோ கிளிப்பை வெளியிட்டு பதில ளித்துள்ள ராகுல் காந்தி, “பிரதமரே, ஜன நாயகத்தின் குரலை உங்களால் அகற்ற முடி யாது. இந்திய மக்கள் உங்களிடம் கேள்வி கேட்கிறார்கள், பதில் சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பேச்சுக்  களும் அவைக்குறிப்பிலிருந்து வெட்டப்பட்டு உள்ளன.

மாநிலங்களவையில், கார்கே பேசும் போது, “பிரதமர் மோடியின் நெருங்கிய நண்ப ரின் சொத்து 2014-இல் ரூ. 50 ஆயிரம் கோடி யாக இருந்தது. இது 2019-இல் ரூ.1 லட்சம் கோடியானது. அதற்கடுத்த இரண்டரை ஆண்டுகளில் 13 மடங்கு உயர்ந்துள்ளது. என்ன மாயாஜாலம் நடந்தது? என எனக்குத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், “அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுன ஆசாமி (மௌனி பாபா) போல் இருப்பது ஏன்?” என்றும் கேட்டிருந்தார். இதுவும் நீக்கப்  பட்டுள்ளது.  மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மரா வை, மற்றொரு மறைந்த முன்னாள் பிரதமர்  வாஜ்பாய் ‘மவுன ஆசாமி’ என்று குறிப்பிட்டு  விமர்சித்த வார்த்தைகள், இப்போதும் அவைக்குறிப்பில் உள்ளது என்பதை, கார்கே  சுட்டிக்காட்டியுள்ளார். அவை விதிகளைக் குறிப்பிட்டு 3 பக்க விளக்கத்தையும் அளித்  துள்ளார். எனினும் அவற்றை நீக்கியுள்ளனர். ஆனால், ஒன்றிய பாஜக அரசைப் பொறுத்த வரை, அவை விதிகள் எல்லாம் எங்களுக்கு தேவையில்லை. அரசாங்கத்தைப் பற்றிக் கூட என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால், அதானி பற்றி பேசுவதை ஏற்க முடி யாது. மீறிப் பேசினால் நீக்கி விடுவோம் என்று  எஜமான விசுவாசத்தைக் காட்டும் நிலை பாட்டை எடுத்துள்ளது.