அதானிக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் விதிமுறைகளில் மாற்றம் செய்த மோடி அரசு
ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் செப்., 26 அன்று, சுற்றுச்சூழல் விதிமுறைகளில் புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டது. ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகளுடன், சிமெண்ட் ஆலை தொடங்கப்பட்டால், அதற்கு சுற்றுச்சூழல் விலக்கு அளிக்க லாம் என்ற புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. ரயில் அல்லது மின் வாகனங்கள் மூலம் மூலப்பொருட்கள் அல்லது இறுதி தயாரிப்புப் பொருட் கள் கொண்டு செல்லப்பட்டால், சுற்றுச் சூழல் விலக்கு அளிக்கலாம்” என வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு இறுதி செய்யப்பட்டால், 2006 சுற்றுச்சூழல் விதிமுறைகளில் சேர்க்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியில் அதானி நிறுவனம் ஆண்டுக்கு 60 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் ஆலையை தொடங்குகிறது. மும்பை கல்யாண் அருகே ஆம்பிவிலி ரயில் நிலையம் எதிரே இந்த சிமெண்ட் ஆலை தொடங்கப்பட்டால் கடும் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும் என்று கருத்து கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்ட அறி விப்பை வெளியிட்டனர். இத்தகைய சூழலில், ஒன்றிய அரசு சிமெண்ட் ஆலை க்கு சுற்றுச்சூழல் விலக்கு அளிக்கும் வகையில் புதிய வரைவு விதிமுறை வெளி யிடப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந் துள்ளது. அதானி அம்புஜா என்ற பெய ரில் சிமெண்ட் நிறுவனம் வைத்துள்ளார்.
