புதுதில்லி, டிச.21- சீன உடனான எல்லைப் பிரச் சனை குறித்து, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுக் கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, நாடாளுமன்ற வளா கத்திலுள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலை மையில் நடைபெற்ற இந்த போராட் டத்தில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, திமுக, விடுதலைச் சிறுத்தைகள், திரிணாமுல் காங்கி ரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளின் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அருணாச்சலப்பிரதேச எல்லை யில், தவாங் பகுதியில் சீனாவின் ஊடுருவல் முயற்சிகள் குறித்து, நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் கடந்த ஒரு வாரத் திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒத்திவைப்புத் தீர் மானங்களையும் அளித்து வரு கின்றனர். எனினும், மோடி அரசு விவாதம் நடத்துவதற்கு தயா ரில்லை.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கின் விளக்க அறிக்கையோடு சரி, அதன்பிறகு, அது ஓடி ஒளியும் வேலையில் ஈடு பட்டு வருகிறது. இதனைக் கண் டித்து, எதிர்க்கட்சிகள் நாடாளு மன்றத்தின் இரு அவைகளையும் வெளிநடப்புச் செய்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், புதன்கிழமை யன்றும் நாடாளுமன்றம் கூடிய போது, சீனாவின் ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலி யுறுத்தினர். மக்களவை இன்று காலை 11 மணிக்குக் கூடியதும், இந்திய - சீன எல்லை விவகாரம் குறித்து விவாதித்தே ஆக வேண் டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட னர். இதனால், கூடிய உடனேயே மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். இதேபோல மாநிலங்களவையும் ஒத்திவைக் கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவை களிலிருந்து வெளியே வந்த எதிர்க் கட்சி எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு, “சீனாவின் ஊடுருவல் குறித்து நாடாளுமன்றத்தில் விவா தம் நடத்த வேண்டும்” என்ற கோரிக் கையை முன்வைத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி னர்.
இதில், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதாதளம், தேசி யவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட 12 கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். சீன விவகாரம் குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், “நமது ராணுவம் குறித்து நாங்கள் கேள்வி எழுப்ப வில்லை. அரசியல் தலைமை குறித்தே நாங்கள் கேள்வி எழுப்புகி றோம். நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல அரசு கடமைப்பட்டிருக்கி றது. ஆனால், அந்த கடமையை அது செய்கிறதா? எல்லை நிகழ்வு குறித்து ராணுவம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. அரசியல் தலைமை யிடம்தான் நாங்கள் கோரிக்கை யை வைக்கிறோம். விவாதம் நடத் தப்படுமானால், நிலைமையின் தன் மையை உணர்ந்து எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆதரவாக நிற்கும். ஒன்று பட்டு குரல் கொடுக்க முடியும்” என தெரிவித்தார்.
மோடி அரசு ஜனநாயகத்தை அவமதிக்கிறது
சோனியா காந்தி குற்றச்சாட்டு
புதன்கிழமையன்று காலை, நாடாளுமன்றம் கூடு வதற்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் நாடாளு மன்றக் குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடை பெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், மாநிலங்க ளவை குழு தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, மக்க ளவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிரான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, சீனாவின் ஊடுருவல் தொடர்பாக நாடா ளுமன்றத்தில் விவாதிக்க மறுத்து ஒன்றிய அரசு அடம்பிடித்து வருகிறது. எல்லையில் என்னதான் நிலைமை என்கிற உண்மையை நாடும், நாட்டு மக்க ளும் அறிந்து கொள்ள முடியாத நிலைமை இருக் கிறது. நமது எல்லையில் ஊடுருவும் சீனாவுக்கு பொரு ளாதார வகையில் தக்க பதிலடியைத் தர ஏன் ஒன்றிய அரசு தயங்குகிறது? என்று கேள்விகளை எழுப்பி னார். நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசு விவாதம் நடத்த மறுப்பது என்பது ஜனநாயகத்தை அவ மதிக்கும் செயல் என்றும் குற்றம் சாட்டினார்.