புதுதில்லி, ஜூலை 11- ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள, புதிய வனப் பாதுகாப்பு விதிமுறைகள், கோடிக்கணக்கான பழங்குடியினர் மற் றும் வனப்பகுதிகளில் வசிப்பவர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது அறிக்கையில் குறிப் பிட்டிருப்பதாவது: மோடி அரசின் புதிய வனப் பாது காப்பு விதிமுறைகள், வனப்பகுதிகளில் வசிப்பவர்களின் உரிமைகளை உறுதி செய்யும் பொறுப்பை ஒன்றிய அரசிடம் இருந்து மாநில அரசுகளுக்கு மாற்று கிறது. இதன் மூலம் பழங்குடியினர் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து ஒன்றிய அரசு விலகுகிறது. இது வனப் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் வனப் பகுதி நிலங்களை எளிதாக பறிக்கும் நடவடிக்கை. எளிதாக தொழில் செய்தல் என்ற பெயரில், புதிய விதிமுறைகள் மூலம் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது மோடியின் நண்பர்களுக்கு மட் டுமே உதவும். வனப்பகுதி நிலங்களை எளி தாக பறிப்பதற்காக, ஐ.மு.கூட்டணி அர சின் வன உரிமைகள் சட்டத்தை மாற்றி, புதிய வனப்பாதுகாப்பு விதிமுறைகளை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. வனப்பகுதிகளை அழிப்பதற்கு முன்பு, பழங்குடியினர் மற்றும் வனப் பகு திகளில் வசிப்பவர்களின் சம்மதத்தை பெற வேண்டும் என்ற பொறுப்பு ஒன்றிய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு சென் றுள்ளது. முந்தைய விதிமுறைகள் படி, வனப்பகுதி நிலத்தை தனியார் திட்டங்க ளுக்கு வழங்க வேண்டும் என்றால், வனப் பகுதிகளில் வசிப்பவர்களின் சம்மதத்தை பெற வேண்டும். இனி இந்த விஷயம் குறித்து மாநிலங்கள்தான் முடிவு செய்யப் போகின்றன. எனினும், பழங்குடியினர் தங்களின் நீர், வனம் மற்றும் நிலங்களை பாதுகாக்கும் போராட்டத்துக்கு காங்கி ரஸ் துணை நிற்கும். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள் ளார்.