states

img

நாட்டை பாதுகாக்கும் ராணுவத்தை அவமரியாதை செய்த மோடி

18ஆவது மக்களவை தேர்தலில் பெரும்பான்மை இழந்த பாஜக, கூட்டணி கட்சிகளின் தயவோடு மீண்டும் ஆட்சி அமைத் துள்ளது. கடந்த ஞாயிறன்று குடியர சுத் தலைவர் மாளிகையில் நடை பெற்ற விழாவில் மோடி 3ஆவது முறை யாக பிரதமராக பதவியேற்றார். மோடி யுடன் 71 பேர் ஒன்றிய அமைச்சர்க ளாக பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் வெளிநாட்டுத் தலைவர் கள், காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களான தொழி லதிபர்கள் அதானி, அம்பானி மற்றும் பாஜக ஆதரவு திரைக்கலைஞர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், பதவியேற்பு விழா வில் நாட்டை பாதுகாக்கும் ராணு வத்தை மோடி அவமதித்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் தீபேந்தர் சிங் ஹூடா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”மோடி பிரதமராக பதவியேற்ற விழாவில் தொழிலதிபர்கள் அதானி, அம்பானி, பாஜக ஆதரவு திரைக் கலைஞர்கள் பின்னால் நமது நாட்டின் ராணுவத் தலைவர்கள் அமர வைக்கப் பட்டனர். இது மிகவும் வெட்கக்கேடா னது, அருவருப்பானது மட்டுமல்ல, நாட்டை பாதுகாக்கும் ராணுவத்திற்கு மிகப் பெரிய அவமரியாதை” எனக் கூறினார்.