புதுதில்லி, ஜன.29- ஜனநாயகம் என்றால் என்ன என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஞாயி றன்று உபதேசம் செய்தார். மின் கழிவுப் பொருட்களில் தங்கம் இருப்பதாகவும் அவர் கூறினார். ஞாயிற்றுக்கிழமையன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய மோடி, 2023-ஆம் ஆண்டின் முதல் (97-ஆவது நிகழ்வு) மனதின் குரல், நிகழ்ச்சியில் உரையாடு வதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. நமது தேசம் ஜனநாயகத்தின் தாய் என்ற இந்த விஷயம் குறித்து மிகவும் பெரு மிதமும் கொள்கிறோம். ஜனநாயகம் என்பது நமது நாடி நரம்புகளில் இருக் கிறது, நமது கலாச்சாரத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ளது உத்திரமேரூர் நகரம். இங்கே 1100-1200 ஆண்டுகள் பழமை யான ஒரு கல்வெட்டு உள்ளது. இது உல கத்தை மலைக்க வைக்கிறது. இந்தக் கல்வெட்டு ஒரு சிறிய அரசியலமைப்புச் சட்டம் போன்றது. கிராம சபை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும்.
அதன் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல் முறை என்ன என்று அதில் கூறப்பட்டுள்ளது. நமது நாட்டின் வரலாற்றில், ஜனநாயக விழுமியங்களுக்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டு. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பச வேஸ்வரரின் மண்டபம் உள்ளது. இங்கே சுதந்திரமான விவாதங்கள், கலந்து ரையாடல்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இது மேக்னா கார்ட்டாவை விடப் பழமையானது. ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையில் ஒவ்வோர் ஆண்டும் 50 மில்லியன் டன் அளவு மின்பொருள் கழிவு தூக்கிப் போடப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு நொடியும் 800 லேப்டாப்புகள் வீசியெறியப்படுகிறது. பல்வேறு செயல்முறைகள் வாயிலாக இந்த மின்கழிவுப் பொருட்களிலிருந்து 17 வகையான விலைமதிப்பற்ற உலோகங் களை எடுக்க முடியும். இதில் தங்கம், வெள்ளி, செம்பு, நிக்கல் ஆகியவை உள்ளன என்றார்.