“தேவகவுடா பிரதம ராக இருந்தபோது மேக தாது திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தத் திட்டம் தேவ கவுடாவின் சிந்தனை யில் பிறந்ததுதான்” என்று மதச்சார்பற்ற ஜன தாதளம் தலைவர் எச்.டி. குமாரசாமி கூறியுள்ளார். “1962-இல் முதல் முறை யாக தேவகவுடா சுயேச்சையாக தேர்த லில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்கு வந்தார். அவர் நடத்திய போராட்டங்க ளின் விளைவாகவே கர்நாடகத்தில் ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டன. காவிரி நீரும் இன்று கர்நாடகத்தில் பயன்படுத்தப்படுகிறது” என்று மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.