ஸ்ரீநகர், ஜூலை 29 - ‘‘பாகிஸ்தானும், சீனாவும் காஷ்மீரின் மறுபக்கத்தை இணைப்பது (சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம்) போல், ஒன்றிய அரசும் ஜம்மு - காஷ்மீரை உலகத்துடன் இணைக்க வேண்டும்’’ என மெகபூபா முப்தி கூறியுள்ளார். இந்தியாவுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தை பாகிஸ்தானும், சீனாவும் மேற்கொண்டு வருகின்றன. இந்த திட்டத்துக்கு இந்தியா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், பல கோடி டாலர் மதிப்பிலான சீனா - பாகிஸ்தான் பொரு ளாதார வழித்தடத் திட்டத்தில் பங்கேற்கு மாறு மூன்றாம் உலக நாடுகளுக்கு சீனாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றன. இந்நிலையில், இந்திய அரசால் எதிர்க்கப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தை ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக மெகபூபா முப்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து ள்ளார். அதில், ‘‘சார்க்கின் குருவாக இந்தியா இருக்க முடியாது என்றால், உல கத்தின் குருவாகவும் இந்தியாவால் ஆக முடியாது. ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய ஜம்மு - காஷ்மீரின் இரு பகுதிகளையும் உலக அமைதி மண்டல மாக அறிவிக்க வேண்டும். மேலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, சார்க் ஒத்துழைப்பு மண்டலாக அறிவிக்க வேண்டும். பாகிஸ்தானும், சீனாவும் காஷ்மீரின் மறுபக்கத்தை இணைப்பது (சீனா-பாகிஸ்தான் பொரு ளாதார வழித்தட திட்டம்) போல், இந்திய அரசும் ஜம்மு - காஷ்மீரை உலகத்துடன் இணைக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.