states

img

முஸ்லிம்கள்- தலித்துக்கள் எந்நேரமும் அச்சத்திலேயே வாழ்கின்றனர்!

லக்னோ, பிப்.21- உத்தரப் பிரதேச மாநில பாஜக ஆட்சியில் தலித்து களும், முஸ்லிம்களும் எந்நேர மும் அச்சத்துடனேயே வாழ்ந்து கொண்டிருப்பதாக முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயா வதி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 7 கட் டங்களாக சட்டப்பேரவைத் தேர்  தல் நடைபெற்று வரும் நிலை யில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். “உத்தரப் பிரதேசத்தில் ஆதித்யநாத் கூறுவது போன்று நல்லாட்சி எதுவும் நடக்க வில்லை. இங்கு பாஜக ஆட்சி யில் தலித்துக்கள், முஸ்லிம் கள் உள்ளிட்டோர் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். சாதி, மதம் பாகுபாட்டின் அடிப்படை யில் மக்கள் துன்புறுத்தப்படு கின்றனர். சாதி, மத, சர்வாதிகார பாஜக  அரசை, பகுஜன் சமாஜ் கட்சி கடந்த 2007-ஆம் ஆண்டில்  இருந்து எதிர்த்துப் போராடி வருகிறது.

உத்தரப் பிரதேசத் தின் அனைத்து சமூகங்களை யும் அரவணைத்துச் செல்லும் பகுஜன் சமாஜ் கட்சியை உத்த ரப்பிரதேச வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும். ஆட்சிக்கு வரும்போதெல் லாம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்தது, பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் தான். வேலை வாய்ப்புகளுக் காக உத்தரப் பிரதேச மக்கள் வெளி மாநிலங்களுக்கு செல் கின்றனர். பகுஜன் சமாஜ் ஆட் சிக்கு வந்தால், இதுபோன்று எதுவும் நடைபெறாது. மாறாக வெளி மாநிலங்களுக்குச் சென்ற உத்தரப்பிரதேச மக் கள் மீண்டும் மாநிலத்திற்கு திரும்ப நடவடிக்கைகள் எடுக் கப்படும். ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் விவசாயி கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் ஆட்சிக்கு வந்தால் ஒன்றிய அரசின் மோசமான சட்டங்கள் எதுவும் உத்தரப் பிரதேசத்தில் நிறைவேற்றப்படாது. இவ் வாறு அவர் பேசினார். கடந்த 2007 சட்டமன்ற தேர்த லில், மொத்தம் உள்ள 403 இடங்களில் 206 இடங்களைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்த மாயாவதி, அதன்பின்னர் 2012 சட்டமன்றத் தேர்தலில் 80 இடங்கள், 2017-ல் 19 இடங்கள் என பின்னடைவையே சந் தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.