states

img

இலவச உணவுப் பொருட்கள், நிதி வழங்கிட மாதர் சங்கம் வலியுறுத்தல்

புது தில்லி,ஆக.17- மணிப்பூர் கலவரத்தால் வேலை இழந்தவர்களுக்கு உடனடியாக உணவுப் பொருட்களும் நிதியுதவி யும் வழங்க வேண்டும் என்று அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கத்தின் புரவலர் பிருந்தா காரத், பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே  ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மணிப்பூரில் மூன்று மாதங் களுக்கும் மேலாக இயல்பு வாழ்க்கை  முடங்கி உள்ளது. புவியியல் ரீதி யாகவும் உணர்வு ரீதியாகவும் மணிப் பூர் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. யாரும் வேலைக்குப் போக முடியாது.  கடன் வாங்கிய பணமும் தேவை களை நிறைவேற்றவில்லை. அரிசி விலையும் உயர்ந்துள்ளது. பெரும் பாலான குடும்பங்கள் ஒரு வேளை உணவு மட்டுமே  உண்ணும் நிலை யில் உள்ளன. அனைவருக்கும் தலா  10 கிலோ தானியம் மற்றும் இதர உண வுப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். ஆதார் இணைக்கப் பட்ட வங்கிக் கணக்குகள் மூலம்  ஒன்றிய, மாநில அரசுகள் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தலை வர்கள் கேட்டுக் கொண்டனர். மணிப்பூரில் பெண்கள் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்கு முதல்வர் பைரேன்சிங் முக்கிய தடை யாக உள்ளார். அமைதிக்கான முதல்  படியாக பைரேன்சிங்கை வெளி யேற்ற வேண்டும். மணிப்பூருடன் இந்தியா இருக்கிறது என்று பிரதமர் மோடி சொல்வது சரிதான். இந்தியாவும் இந்தியர்களும் மணிப்பூருடன் உள்ளனர். ஆனால் மோடியும் பாஜகவும் மணிப்பூரை ஏமாற்றி விட்டன. மணிப்பூர் ஆளுநர், குற்றவாளிகள் மீது நட வடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள் ளேன் என்றார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. மாதர் சங்க தலை வர்கள், ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் என தெரிவித்தனர். பிருந்தா காரத், மரியம் தாவ்லே மற்றும் சங்கத் தலைவர் பி.கே.ஸ்ரீமதி ஆகியோர் கடந்த 9ஆம் தேதி  முதல் 11ஆம் தேதி வரை மணிப்பூர்  சென்றிருந்தனர். அப்போது அங்குள்ள மக்களின் துயரங்களை கேட்டறிந்து ஆறுதல் தெரிவித்தனர்.