புதுதில்லி, ஏப்.30- நாட்டின் 29-ஆவது இராணுவத் தளபதியாக மனோஜ் பாண்டே சனிக்கிழமை பொறுப்பேற் றுக்கொண்டார். இராணு வத் தளபதியாக இருந்த எம்.முகுந்த் நரவனேயின் பதவிக்காலம் சனிக்கிழமை நிறைவடைந்து அவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய இராணுவத் தளபதி யாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்றுக் கொண்டார். இராணுவத்தின் துணைத் தளபதியாக பொறுப்பு வகித்து வந்த மனோஜ் பாண்டே, பொறியாளர்கள் பிரி விலிருந்து ராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்ட முதல் நபர் ஆவார். பிப்ரவரி 1-ஆம் தேதி, ராணுவத்தின் துணைத் தளபதியாக பொறுப்பேற்று கொள்வதற்கு முன்பு, சிக்கிமில் இந்திய-சீன ராணுவ எல்லை, அருணாச்சல பிர தேசம் பகுதிகள் அடங்கிய கிழக்கு ராணுவப் பிரிவை மனோஜ் பாண்டே தலைமை தாங்கி நடத்தி வந்தார்.