states

img

சட்டப்பேரவை அமளியை மம்தா கைதட்டி ரசித்தார் !

“சட்டப்பேரவை முதல் நாள் கூட்டத்தின் போது அமைச்சர்களும், ஆளும் கட்சி உறுப்பி னர்களும் கிட்டத்தட்ட என்னை முற்றுகையிட்டு நின்றனர். பாரம்பரிய மிக்க சட்டப்பேரவை அரங்கில் இதுபோன்று நிகழ்ச்சிகள் நடை பெறுவதை யாரும் நியாயப்படுத்தக் கூடாது. இது எங்கே செல்கிறது? எதற்காக முதல்வர் (மம்தா பானர்ஜி) கை தட்டி ரசித்தார். அமளியை பார்த்து கை தட்டி மகிழ்ந்தாரா?” என்று மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.