states

img

ஒரு பஞ்சாயத்து தலைவர் குறைந்தது ரூ.15 லட்சம் வரை லஞ்சம் வாங்கலாம்!

போபால், டிச.29- ஒரு பஞ்சாயத்து தலைவர் ரூ. 15 லட்சம் வரை லஞ்சம் வாங்கலாம்.. அதற்கு மேல் வாங்கினால் மட்டும்தான் அதனை குறைசொல்ல முடி யும் என்று மத்தியப்பிரதேசத் தைச் சேர்ந்த பாஜக எம்.பி.  ஜனார்த்தனன் மிஸ்ரா பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார். ரேவாவில், “தற்கால சவால் களை சந்திப்பதில் ஊடகத்தின் பங்கு” என்ற தலைப்பிலான கருத்தரங்கில் ஜனார்த்தனன் மிஸ்ரா உரையாற்றியுள்ளார். அதில்தான் இவ்வாறு கூறி யுள்ளார். “என்னிடம் அடிக்கடி பஞ்சா யத்துத் தலைவர்கள் மீதான லஞ்ச ஊழல் புகார்கள் வரு கின்றன. அவ்வாறு புகார் சொல் பவர்களிடம் நான் விளையாட் டுக்காக சொல்வதுண்டு. பஞ் சாயத்துத் தலைவர்கள் ரூ. 15 லட்சத்துக்கும் மேல் லஞ்சம் வாங்கியதாகத் தெரிந்தால் மட்டும் என்னிடம் வந்து புகார் செய்யுங்கள். இல்லாவிட்டால் சொல்லாதீர்கள் என்பேன்.  ஏனென்றால்?

ஒரு பஞ்சா யத்துத் தலைவர் ஒரு தேர்த லில் போட்டியிட குறைந்தது ரூ. 7 லட்சம் செலவிட வேண்டும். அடுத்த தேர்தலில் போட்டியிட  மறுபடியும் ரூ. 7 லட்சத்தை செல விட வேண்டும். இதில், பண வீக்கத்தைப் பொறுத்து கூடு தலாக ஒரு லட்சம் செலவாகும். ஒட்டுமொத்தமாக சேர்த்தால் ரூ.15 லட்சம் ஆகிறது. எனவே, 15 லட்சத்துக்கு மேல் வாங்கு கிறார் என்றால் மட்டுமே அது ஊழல் ஆகும்” என்று ஜனார்த்த னன் மிஸ்ரா பேசியுள்ளார். பாஜக எம்.பி.யின் இந்தப் பேச்சு வீடியோவாக வெளியான நிலையில், பலரும் அவரது பேச் சுக்கு கண்டனம் தெரிவித்து வரு கின்றனர். இதுதான் பாஜக-வின் ஊழல் ஒழிப்பு லட்சணமா? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். “பிரதமர் நரேந்திர மோடி யின் தாடியில் இருந்துதான் ‘பிர தமர் வீடு’ வெளிவருகிறது. மேலும் மோடி தாடி வைத்திருக் கும் வரை மக்களுக்கு வீடுகள் கிடைக்கும்” என்றும் முன் பொருமுறை உளறிக்கொட்டிய வரும் இதே ஜனார்த்தனன் மிஸ்ராதான் என்பது குறிப்பி டத்தக்கது.