states

எல்ஐசி ரூ.17,469 கோடி லாபம் ஈட்டி சாதனை

புதுதில்லி, நவ.11 இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவ னங்களில் முக்கியமானது எல்.ஐ.சி. இந்நிறுவனம் 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் நிறை வடைந்த அரையாண்டில் ரூ.17,469 கோடி (வரிக்கு பிந்தைய) லாபத்தை ஈட்டியுள்ளது.  செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த அரை யாண்டில் தனிநபர் பிரிவில் மொத்தம் 80,60,725 பாலிசி கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.  எல்ஐசியின் சொத்து மதிப்பு 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று ரூ. 42 லட்சத்து 93 ஆயிரத்து  778 கோடியாக இருந்தது. 2023-ஆம் ஆண்டு செப்டம்பர்  30 ரூ. 47,43,389 கோடியாக உயர்ந்துள்ளது. சொத்து மதிப்பு 10.47 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து எல்.ஐ.சி .நிறுவனத்தின் தலைவர் சித்  தார்த்த மொஹந்தி அளித்துள்ள பேட்டியில், “வங்கி கள் மற்றும் மாற்றுக் காட்சி ஊடகங்களின் மூலம் பாலிசி  விற்பனை அதிகரித்துள்ளதால் பாலிசி வழங்கும் சேவை  பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை  மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் தொட ர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். தொடர்ந்து ஆதரவு  அளித்து வரும் அனைத்துப் பங்குதாரர்களுக்கும் நன்றி  தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.