states

img

கேரளத்தில் வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம்!

கண்ணூர், டிச.27- வகுப்புவாதத்தை மதச்சார்பின் மையால் எதிர்கொள்வதுடன், வளர்ச்சித் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறி யுள்ளார். பினராயி கிராமம் பாறப்புறத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் 82-ஆவது ஆண்டு விழாவை தொடங்கி வைத்து பினராயி விஜயன் பேசியுள்ளார். அப் போது இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: இப்போது வளர்ச்சித்திட்டங்கள் தேவையில்லை என்பது யுடிஎப்-பின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், இப் போது இல்லை என்றால் வேறு எப் போது என்பதுதான் எங்கள் கேள்வி? கடந்த 5 ஆண்டுகளாக வளர்ச்சிப் பணி கள் தள்ளிப்போயிருந்தால், கேரளா வின் நிலை என்னவாகியிருக்கும்? எனவே, மக்களுக்குத் தேவையான எந்த வளர்ச்சித் திட்டத்தையும் நாங் கள் கைவிடப் போவதில்லை. இன்று வகுப்புவாதக் கட்சிகளால் தலைதூக்க முடியாத மாநிலமாக கேரளா உயர்ந்து நிற்கிறது.

இதற்கு தீங்கிழைக்க முடியுமா? என்று சிலர் சிந்திக்கிறார்கள். நாட்டில் பயங்கர மான சூழ்நிலையை ஆர்எஸ்எஸ் உரு வாக்கி வருகிறது. இங்கு வாழ முடி யுமா? என்ற கவலை கூட பல இடங்க ளில் எழுகிறது. இதை எதிர்கொள்ளும் வலு தம்மிடம் இருக்கிறது என்பது போல் எஸ்டிபிஐ நடவடிக்கை உள்ளது. ஆனால், வகுப்புவாதத்தை மதச்சார் பின்மையால்தான் எதிர்கொள்ள முடி யும். முஸ்லிம் லீக் ஒரு அரசியல் கட்சி என்ற தன் இயல்பை மாற்றி, மற்றொரு போர்வையை போர்த்திக் கொள்ள முயற்சிக்கிறது. இவையெல்லாம் இடது ஜனநாயக முன்னணியுடனான மக்களின் அணி வகுப்பை உடைக்கும் நடவடிக்கை களின் ஒரு பகுதியே என்பதை கேரள மக்கள் அறிவார்கள்.  இவ்வாறு பினராயி விஜயன் கூறி யுள்ளார்.