states

img

பாஜக கட்டுக்கதைகளுக்கு சுடச்சுட பதிலடி தந்து விடுங்கள்!

மும்பை, மார்ச் 21- பாஜக-வின் பொய்ப் பிரச் சாரத்திற்கு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா கட்சிகளை உள்ளடக் கிய ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி எம்எல்ஏ-க்கள், உட னடியாக பதிலடி தந்து விட வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். ‘மகாவிகாஸ் அகாதி’ கூட் டணியின் இளம் எம்எல்ஏக்கள், தேசியவாத காங்கிரஸ் கட் சித் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்த னர். அப்போது அவர்களிடம், “சரத்பவார், தாம் இளம் அர சியல் தலைவராக இருந்த போது ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட் சிக்கும் இருந்த உறவு, தற் போது ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நில வும் உறவு குறித்தும் நினைவு களைப் பகிர்ந்து கொண்டார்.

பாஜகவினர் சித்தரிக்கும் தவறான கட்டுக்கதை களுக்குச் சட்டப்பேரவையி லும், வெளியேயும் ஆக்ரோஷ மாகப் பதிலடி கொடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார். ‘மகாவிகாஸ் அகாதி’ கூட் டணி அரசு தனது முழு ஆட்சிக் காலத்தை நிறைவு செய்யும் என அவர்களிடம் உறுதி அளித் ததுடன், கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் தொகுதி மேம் பாட்டுப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் பிரச்சனைகளை அரசிடம் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள, தேசி யவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மகேஷ் தபாசே, இளம் சட்டமன்ற உறுப்பினர்கள் “பாஜக-வைத்  தங்கள் தொகுதி மட்டுமில்லா மல் மாவட்டம், மண்டல அள விலும் கடுமையாக எதிர்ப்போம்” என உறுதி அளித்ததாக குறிப் பிட்டுள்ளார்.