states

img

‘இந்தியா’வின் வெற்றியை உறுதிப்படுத்துவோம்; பாஜகவிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவோம்!

முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமன்றி; பாஜகவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது என்பதை உணர்ந்து திமுகவினர் உழைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:

மாநிலங்களின் வளர்ச்சி யை விரும்பாத -  மாநிலங்களின் உரி மைகளை மதிக்காத - மாநிலங்க ளுக்கு போதிய நிதியளிக்காத - மாநி லங்கள் என்ற கட்டமைப்பே இருக் கக்கூடாது என்ற கொள்கையைக் கொண்டவர்களின் ஆட்சி இந்திய ஒன்றியத்தில் நடைபெற்று வரு கிறது. இதுகுறித்து, ‘ஸ்பீக்கர் பார்  இந்தியா’ (Speaker for India) என்ற  நிகழ்வின் மூன்றாவது பகுதியில் பேசியுள்ளேன். முத்தமிழறிஞர் கலைஞர், சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய மாநில சுயாட்சிக் கொள்கையையும் அதன்  இன்றைய தேவையையும் அந்த உரையில் குறிப்பிட்டுள்ளேன். தமி ழிலும் இந்திய மொழிகள் பலவற்றி லும் வெளியாகியுள்ள அந்த உரை யை உடன்பிறப்புகளான நீங்கள் கேட்டிருப்பீர்கள். அதனை எல்லாரி டமும் எடுத்துச் செல்ல வேண்டிய  பணியையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன் மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதி ரான மதவாதக் கொள்கை கொண்ட  ஆட்சியை அகற்றிட இந்தியா கூட் டணி உருவாகி , நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. அதில், திமுகவின் பங்கு மகத்தானது.  2024 நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை இந்  தியா கூட்டணி பெற்றிட, தமிழ்நாடு,  புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளி லும் நாம் வெற்றி பெற வேண்டும்.

அதற்கான கட்டமைப்பை இந்தியா  கூட்டணி உருவாவதற்கு முன்பே நாம் தொடங்கிவிட்டோம். தமிழ்  நாட்டை மட்டுமல்ல, இந்தியா வைக் காப்பாற்ற வேண்டிய கடமை யையும் திமுக தன் தோளில் சுமந்  துள்ளது.  நாம் உழைப்பது நம் இயக்கத்  தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காக! ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்த தாக சி.ஏ.ஜி.யால் குற்றம் சாட்டப்  பட்டுள்ள பாஜகவின் கைகளிலி ருந்து நாட்டைக் காப்பாற்றும் வகை யிலும், அவர்களுடன் சேர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் எண்  ணற்ற துரோகங்கள் செய்துவிட்டு,  இப்போது கூட்டணி முறிந்துவிட்ட தாக வேடம் போடும் அதிமுகவுக்கு  எதிராகவும், வீடு வீடாக திமுக தொண்டர்கள் பிரச்சாரம் மேற் கொள்ள வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத்  திட்டம் எனும் புரட்சித் திட்டம், பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லாத விடியல் பயணத்  திட்டம், காலை உணவுத் திட்டம்,  நான் முதல்வன் திட்டம், மக்களைத்  தேடி மருத்துவம் உள்ளிட்ட மகத்தான திட்டங்களின் பயன்கள் மக்களிடம் சரியாகப் போய்ச் சேர வேண்டும். அதைப் பற்றி அவர்களி டம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  இன்று இந்தியா முழுவதும் பா.ஜ.க. அரசுக்கு எதிரான அலை  கடுமையாக வீசுகிறது. வரவிருக் கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா நம் வசம்தான்! ஜனநாய கம் காப்பதில் உறுதியாக உள்ள  தோழமை சக்திகளுடன் இணைந்து மகத்தான வெற்றியைப் பெறு வோம். அதற்கேற்ற வகையில் ஒவ்  வொரு வாக்குச்சாவடியாகக் களம் காணட்டும் கழகப் படை. வெற்றி யை உறுதி செய்யும் உழைப்பை வழங்கட்டும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!