லாலு பிரசாத் உறுதி
புதுதில்லி, மார்ச் 11- ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். நானோ என் குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரும் அவர்கள் முன் தலை வணங்கமாட்டோம் என்று லாலு பிர சாத் அறிவித்துள்ளார். தில்லி, பீகார் மாநிலங்களில், லாலு பிரசாத் மற்றும் அவரது உறவினர் களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். லாலுவின் மகன் தேஜஸ்வியின் நியூ பிரண்ட்ஸ் காலனியில் உள்ள இல் லத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது நிறைமாதக் கர்ப்பிணி யான தேஜஸ்வியின் மனைவி ராஜ்ஸ்ரீ-யை வலுக்கட்டாயமாக 15 நேரம் ஒரே இடத்தில் அமர வைத்துத் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த துன்புறுத்தல் குறித்து லாலு பிரசாத் டுவிட்டரில் பதி விட்டுள்ளார்.
அதில், “நான் கறுப்பு எமர் ஜென்சி காலத்தைப் பார்த்தேன், அதற்கு எதிராகவும் போராடினேன். கர்ப்பிணி மருமகள் மட்டுமின்றி என் பேரக் குழந்தைகள் மற்றும் மகள்களையும் அமலாக்கத்துறை நீண்ட நேரம் உட் கார வைத்தார்கள். பாஜக மிகவும் கீழ்நிலையில் இருப்பது நன்றாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வுக்கு எதிரான எனது போராட்டம் தொட ரும். நானோ என் குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரும் அவர்கள் முன் தலை வணங்கமாட்டோம்” என்றும் லாலு பிர சாத் அறிவித்துள்ளார். இதனிடையே, லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் அவ ரது சகோதரிகள் ராகினி யாதவ், சந்தா யாதவ் மற்றும் ஹேமா யாதவ் ஆகி யோரின் வீடுகளிலிருந்து ரூ. 53 லட்சம் ரொக்கம், 1.5 கிலோ தங்கம், 540 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் 1900 அமெரிக்க டாலர்களை கைப்பற்றி யுள்ளதாக அமலாக்கத்துறை தெரி வித்துள்ளது.