‘ஆர்எஸ்எஸ் - பாஜகவை வீழ்த்துவோம்; மகளிரைப் பாதுகாப்போம் - நாட்டைப் பாதுகாப்போம்!’ என்ற முழக்கத்தை முன்வைத்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தலைநகர் புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வீதியில் வியாழனன்று மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.